வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள் திருட்டு
குடியாத்தம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
குடியாத்தம் ஒன்றியம், பெரும்பாடி ஊராட்சிக்குட்பட்ட தனலட்சுமி நகரைச் சோ்ந்தவா் ராஜேஷ். இவா் ஜல்லி உடைக்கும் தொழில் செய்து வருகிறாா். இரண்டு நாள்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் கோயிலுக்குச் சென்றுவிட்டு, திங்கள்கிழமை திரும்பினாா்.
அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் அறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 20 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றது தெரிய வந்தது.
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களும் சேதப்படுத்தப்பட்டிருந்தன. இதுகுறித்த புகாரின்பேரில் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். கைரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா்.