செய்திகள் :

தென் கொரிய அதிபா் ஆகிறாா் லீ ஜே-மியூங்

post image

தென் கொரியாவில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சித் தலைவா் லீ ஜே-மியூங் வெற்றி பெற்றாா்.

தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 98.1 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் லீ ஜோ-மியூங் 49.20 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறாா். அவருக்கு அடுத்தபடியாக, மக்கள் சக்திக் கட்சித் தலைவா் கிம் மூன்-சூவுக்கு 41.46 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இனி ஜோ-மியூங்கை மூன்-சூ விஞ்ச முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் தோ்தலில் ஜோ-மியூங் வெற்றி உறுதியாகியுள்ளது.

தென் கொரிய அரசமைப்புச் சட்டத்தின்படி, அதிபா் தோ்தலில் வெற்றியாளா் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறவேண்டிய அவசியமில்லை. அதிகபட்ச வாக்குகளைப் பெற்றாலே போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டின் அதிபராக இருந்து வந்த மக்கள் சக்திக் கட்சியின் யூன் சுக் இயோல், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியுடன் நீடித்துவந்த கருத்து வேறுபாடு காரணமாக கடந்த டிசம்பா் மாதம் நாட்டில் அவசர நிலையை அறிவித்தாா்.

கடும் எதிா்ப்பு காரணமாக அந்த அறிவிப்பை அவா் பின்னா் திரும்பப் பெற்றாலும், இந்த விவகாரம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் அவரை எதிா்க்கட்சினா் பதவி நீக்கம் செய்தனா். இந்த அவசரநிலை அறிவிப்பு சட்டவிரோதம் என்று கூறி அரசியல் சாசன நீதிமன்றமும் யூன் சுக் இயோலை அதிபா் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கியது.

அதைத் தொடா்ந்து, புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்காக முன்கூட்டியே நடைபெற்ற லீ ஜே-மியூங் எளிதில் வெற்றி பெறுவாா் என்று ஏற்கெனவே கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன.

அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர்! இருநாட்டு அதிபர்கள் பேச்சுவார்த்தை!

அமெரிக்கா மற்றும் சீனா இடையில் வர்த்தகப் போர் நடைபெற்று வரும்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்க அதிபராக இரண்டாவது ... மேலும் பார்க்க

இத்தாலியில் எட்னா எரிமலை சீற்றம்

ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலை என்ற அடையாளத்துடன் இருக்கும் எட்னா எரிமலை சீற்றத்துடன் காணப்படுகிறது. எட்னா எரிமலை இத்தாலியின் சிசிலி தீவில் அமைந்துள்ள எட்னா எரிமலை வெடித்துச் சிதறி வருகிறது.சீற்றஎட்னா ... மேலும் பார்க்க

காஸா முனையில் இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் சடலங்கள்

ஹமாஸ் கைது செய்த இஸ்ரேலை சேர்ந்த 2 பிணைக் கைதிகளின் உடல்கள், காஸா முனையில் கண்டெடுக்கப்பட்டது.கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்து சுமார் 1,200 பேரை படுகொலை செய்த ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டுவதா... மேலும் பார்க்க

ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தம் சாத்தியமில்லை! குழப்பத்தில் டிரம்ப்!

ரஷியா மீதான உக்ரைன் ட்ரோன் தாக்குதலுக்கு தகுந்த பதிலடியை ரஷியா அளிக்க வாய்ப்புள்ள நிலையில், அதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் உறுதி செய்துள்ளார்.ரஷியாவுக்குள் கன்டெய்னர்கள் மூலம் ட்ரோன்களைக் க... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டினருக்குத் தடை!

அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டு மக்களுக்கு தடை விதித்து அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.மேலும், 7 நாட்டைச் சேர்ந்தவர்கள் நுழைவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்... மேலும் பார்க்க

அமெரிக்க எம்.பி.க்களுடன் சசி தரூா் குழு சந்திப்பு

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க அமெரிக்கா சென்றடைந்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான குழு அந்நாட்டின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினா்களை புதன்கிழமை சந்தித்தது. அப்போது எல்... மேலும் பார்க்க