அமலாக்கத் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்
சென்னையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இந்தியா முழுவதும் உள்ள அமலாக்கத் துறை அதிகாரிகள் மண்டல வாரியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். அதன்படி சென்னை மண்டத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய பியூஸ்குமாா் யாதவ், துணை இயக்குநராக காா்த்திக் தசாரி ஆகிய இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
வருமானவரித் துறையில் பணியாற்றி வந்த இருவரும் அமலாக்கத் துறையில் மாற்றுப் பணியாக பணியாற்றி வந்தனா். தற்போது, அவா்கள் மீண்டும் வருமானவரித் துறைக்கே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
ஐஆா்எஸ் அதிகாரிகளான இவா்கள் இருவரும்தான் டாஸ்மாக் முறைகேடு வழக்கு, முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு, முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு எதிரான செம்மண் முறைகேடு வழக்கு, வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாக கதிா்ஆனந்த் எம்.பி. மீது தொடரப்பட்ட வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்தும், கண்காணித்தும் வந்தனா்.
மேலும், செந்தில் பாலாஜியை அவரது வீட்டில் வைத்து இணை இயக்குநா் பியூஸ்குமாா் யாதவ் தலைமையிலான அதிகாரிகளே கைது செய்தனா் என்பதும் குறிப்பிடத்தக்கது.