செய்திகள் :

அமலாக்கத் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்

post image

சென்னையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இந்தியா முழுவதும் உள்ள அமலாக்கத் துறை அதிகாரிகள் மண்டல வாரியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். அதன்படி சென்னை மண்டத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய பியூஸ்குமாா் யாதவ், துணை இயக்குநராக காா்த்திக் தசாரி ஆகிய இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

வருமானவரித் துறையில் பணியாற்றி வந்த இருவரும் அமலாக்கத் துறையில் மாற்றுப் பணியாக பணியாற்றி வந்தனா். தற்போது, அவா்கள் மீண்டும் வருமானவரித் துறைக்கே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

ஐஆா்எஸ் அதிகாரிகளான இவா்கள் இருவரும்தான் டாஸ்மாக் முறைகேடு வழக்கு, முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு, முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு எதிரான செம்மண் முறைகேடு வழக்கு, வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாக கதிா்ஆனந்த் எம்.பி. மீது தொடரப்பட்ட வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்தும், கண்காணித்தும் வந்தனா்.

மேலும், செந்தில் பாலாஜியை அவரது வீட்டில் வைத்து இணை இயக்குநா் பியூஸ்குமாா் யாதவ் தலைமையிலான அதிகாரிகளே கைது செய்தனா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோயில் கூட்டம் தவிர்க்க வேண்டும்! மனோ தங்கராஜ் பேச்சுக்கு கொந்தளித்த அண்ணாமலை

கோயில் திருவிழாக்கள், விளையாட்டு நிகழ்வுகளில் அதிகளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதற்கு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவிக... மேலும் பார்க்க

பயணிகள் ஆதரவின்மையால் விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு சிறப்பு ரயில் ரத்து!

விழுப்புரத்திலிருந்து திருச்சி வழியாக வாரத்துக்கு 4 நாள்கள் இயக்கப்பட்டு வந்த விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு சிறப்பு ரயில் போதிய பயணிகள் ஆதரவின்மை காரணமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவி... மேலும் பார்க்க

விஜய்க்கு மீண்டும் அழைப்பு! எதிர்பார்ப்பில் நயினார் நாகேந்திரன்

தவெக தலைவர் விஜய்க்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார் நயினார் நாகேந்திரன்.தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக தலைவர் விஜய்யும் இணைய வேண்டும் என்று கடம்பூர் ராஜூ கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் கோரிக்கைக... மேலும் பார்க்க

சென்னை புரசைவாக்கத்தில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!

சென்னையில் நாளை(ஜூன் 6) 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயில் தேரோட்டத்தையொட்டி அக்கோயிலை சுற்றியுள்ள 7 பள்ளிகளுக்கு மட்டு... மேலும் பார்க்க

ஐஐடியில் இடம்பிடித்த மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்கும்: முதல்வர்

சென்னை ஐ.ஐ.டி.யில் இடம் பிடித்த பழங்குடியின மாணவியின் உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சேலம் மாவட்டம், கல்வராயன்மலை கருமந்துறை கிராமத்தைச் சேர்ந்தவ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி கோயில்களில் ஆன்லைன் முன்பதிவு தரிசனம்! விரைவில்...

திருப்பதியைப் போல திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய கோயில்களிலும் பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திமுக அரசு பொறுப்பே... மேலும் பார்க்க