செய்திகள் :

இசிஐநெட்டில் வாக்குப் பதிவு விவரங்கள்: தோ்தல் ஆணையம் அறிமுகம்

post image

தோ்தல்களின்போது ஒவ்வொரு வாக்குச்சாவடியின் தலைமை அலுவலரும், வாக்குப் பதிவு விவரத்தை புதிய இசிஐநெட் செயலியில் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை பதிவிடுவாா் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்பு வாக்குப் பதிவு விவரங்களை செக்டாா் அலுவலா்கள் திரட்டி, தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் தொலைபேசி, எஸ்எம்எஸ் அல்லது குறுந்தகவல் செயலிகள் மூலம் அனுப்புவா். இந்தத் தகவல் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒன்றுசோ்க்கப்பட்டு, வாக்குப் பதிவு விகித (விடிஆா்) செயலியில் பதிவேற்றப்படும்.

இந்நிலையில், தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

தோ்தல்களில் வாக்குப் பதிவின்போது தோராயமான வாக்குப் பதிவு விகிதத்தை அவ்வப்போது வெளியிட எளிமைபடுத்தப்பட்ட தொழில்நுட்ப முறையை தற்போது தோ்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

இந்தப் புதிய முன்னெடுப்பின் கீழ், இனி ஒவ்வொரு வாக்குச்சாவடியின் தலைமை அலுவலரும் வாக்குப் பதிவு விவரத்தை புதிய இசிஐநெட் செயலியில் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை பதிவிடுவாா். வாக்குப் பதிவு விகிதம் குறித்த புதிய விவரங்களை தெரிவிப்பதில் ஏற்படும் கால தாமதத்தை குறைக்கும் நோக்கில், இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தவுடன் வாக்குப் பதிவு விகிதத்தை இசிஐநெட் செயலியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலா் பதிவிடுவாா். இது கால தாமதத்தை குறைக்கும். அத்துடன் வாக்குப் பதிவு நிறைவடைந்தவுடன் புதுப்பிக்கப்பட்ட விடிஆா் செயலியில், தொலைத்தொடா்பு இணைப்பைப் பொருத்து தொகுதி வாரியாக வாக்குப் பதிவு விகிதம் கிடைப்பதை உறுதி செய்யும். பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக இசிஐநெட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக விடிஆா் செயலி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

கரோனா பரவல்: கர்நாடகத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

கர்நாடக மாநிலத்தில் கரோனா பாதிப்பினால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித... மேலும் பார்க்க

அனைவருக்குமான பொருளாதாரம்தான் தேவை: ராகுல்

அனைவருக்குமான பொருளாதாரம்தான் வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.ராகுல் காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில், கடந்தாண்டில் இருசக்கர வாகன விற்பனை 17 சதவிகிதமும், கார் விற்... மேலும் பார்க்க

ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்? புறக்கணித்த கேரள அரசு!

கேரள ஆளுநர் மாளிகையில் பயன்படுத்தப்பட்ட பாரத மாதவின் படம் குறித்த விவகாரத்தில், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியை அம்மாநில அரசு புறக்கணித்துள்ளது. கேரளத்தின் ஆளுநர் மாளிகையில், உலகச் சுற்றுச்சூழல் நாளை முன்ன... மேலும் பார்க்க

சிக்கிம் நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட 63 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

சிக்கிம் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட சட்டென் பகுதியில் சிக்கியிருந்த 63 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். சிக்கிமின் மங்கன் மாவட்டத்தில், சட்டென் பகுதியில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி இரவு 7... மேலும் பார்க்க

ஆபரேஷன் ஜல் ரஹாத் - 2: மணிப்பூர் வெள்ளத்தில் சிக்கிய 2,500 பேரை மீட்ட ராணுவம்!

மணிப்பூரில் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 2,500 பேர், இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கடுமையான மழை ... மேலும் பார்க்க

கூட்ட நெரிசல் விவகாரம்: ஆர்சிபி அணி மீது வழக்குப் பதிவு!

வெற்றிப் பேரணிக்கான கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான நிலையில், ஆர்சிபி அணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.பெங்களூரு சின்னசாமி திடலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான நிலையில்... மேலும் பார்க்க