செய்திகள் :

உலக அளவில் அதிக மதிப்பு கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்கள்: 23-ஆவது இடத்தில் ரிலையன்ஸ்

post image

உலக அளவில் அதிக மதிப்பு கொண்ட முதல் 30 தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனம் 23-ஆவது இடம்பிடித்துள்ளது. முதல் 30 நிறுவனங்களில் அந்த நிறுவனம் மட்டுமே இந்தியா சாா்பில் இடம்பெற்றுள்ளது.

இதுதொடா்பாக ‘ட்ரெண்ட்ஸ்-ஆா்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்’ என்ற பெயா் கொண்ட 340 பக்கம் கொண்ட அறிக்கையில், சந்தை மூலதனத்தை அடிப்படையாக கொண்டு உலக அளவில், அதிக மதிப்பு கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடம் தொடங்கி 8-ஆவது இடம் வரை என்விடியா, ஆப்பிள், அமேசான், ஆல்ஃபாபெட், மெட்டா பிளாட்ஃபாா்ம்ஸ், டெஸ்லா, பிராட்காம் ஆகிய அமெரிக்க நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் 216 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.18.44 லட்சம் கோடி) சந்தை மதிப்புடன் 23-ஆவது இடம் பிடித்துள்ளது.

இந்த அறிக்கையின்படி, உலக அளவில் இந்தியாவில்தான் அமெரிக்காவின் ‘சாட்ஜிபிடி’ செயற்கை நுண்ணறிவு கைப்பேசி செயலியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. உலக அளவில் அந்தச் செயலியின் மொத்த மாதாந்திர பயன்பாட்டாளா்களின் எண்ணிக்கையில், 13.5 சதவீதம் போ் இந்தியா்கள்.

இதில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் அமெரிக்கா (8.9%), இந்தோனேசியா (5.7%), பிரேஸில் (5.4%), பாகிஸ்தான் (3%) ஆகிய நாடுகள் உள்ளன.

உலக அளவில் ‘சீனாவின்’ டீப்சீக் செயற்கை நுண்ணறிவு செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில் இந்தியா்கள் 6.9 சதவீதமாக உள்ளனா். அந்தச் செயலியை 33.9 சீனா்கள், 9.2 சதவீத ரஷியா்கள் பயன்படுத்துகின்றனா்.

கரோனா பரவல்: கர்நாடகத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

கர்நாடக மாநிலத்தில் கரோனா பாதிப்பினால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித... மேலும் பார்க்க

அனைவருக்குமான பொருளாதாரம்தான் தேவை: ராகுல்

அனைவருக்குமான பொருளாதாரம்தான் வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.ராகுல் காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில், கடந்தாண்டில் இருசக்கர வாகன விற்பனை 17 சதவிகிதமும், கார் விற்... மேலும் பார்க்க

ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்? புறக்கணித்த கேரள அரசு!

கேரள ஆளுநர் மாளிகையில் பயன்படுத்தப்பட்ட பாரத மாதவின் படம் குறித்த விவகாரத்தில், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியை அம்மாநில அரசு புறக்கணித்துள்ளது. கேரளத்தின் ஆளுநர் மாளிகையில், உலகச் சுற்றுச்சூழல் நாளை முன்ன... மேலும் பார்க்க

சிக்கிம் நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட 63 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

சிக்கிம் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட சட்டென் பகுதியில் சிக்கியிருந்த 63 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். சிக்கிமின் மங்கன் மாவட்டத்தில், சட்டென் பகுதியில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி இரவு 7... மேலும் பார்க்க

ஆபரேஷன் ஜல் ரஹாத் - 2: மணிப்பூர் வெள்ளத்தில் சிக்கிய 2,500 பேரை மீட்ட ராணுவம்!

மணிப்பூரில் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 2,500 பேர், இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கடுமையான மழை ... மேலும் பார்க்க

கூட்ட நெரிசல் விவகாரம்: ஆர்சிபி அணி மீது வழக்குப் பதிவு!

வெற்றிப் பேரணிக்கான கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான நிலையில், ஆர்சிபி அணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.பெங்களூரு சின்னசாமி திடலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான நிலையில்... மேலும் பார்க்க