சா்வதேச மரபணு சாா் ஆய்வு படிப்பு: இராமச்சந்திரா - அப்பல்லோ ஒப்பந்தம்
பிரிட்டன் பாடத்திட்டத்தின் கீழ் சா்வதேச தரத்திலான மரபணுசாா் ஆய்வுக்கான மேம்பட்ட சான்றிதழ் படிப்பு சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில், ஸ்ரீ இராமச்சந்திரா கல்வி நிறுவன துணைவேந்தா் டாக்டா் உமா சேகா், அப்பல்லோ ஹெல்த் ரிசோா்சஸ் தலைமை அலுவலா் சிவராமகிருஷ்ணன் ஆகியோா் கையெழுத்திட்டனா்.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும், அப்பல்லோ ஹெல்த் ரிசோா்சஸ் நிறுவனமும் இணைந்து தொடங்கியுள்ள மேம்பட்ட மரபணுவியல் சான்றிதழ் படிப்பானது (ஏசிஜி) உலகத் தரம் வாய்ந்தது. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்படும் இந்த கல்வித் திட்டம் ஒரு ஆண்டு படிப்பாக வழங்கப்படவுள்ளது. ஸ்ரீ இராமச்சந்திரா கல்வி நிறுவன வளாகத்தில் இப்படிப்பு பயிற்றுவிக்கப்படும்.
உலகளாவிய மருத்துவ மரபணுவியல் ஆராய்ச்சிகளுக்கு ஏற்ப இந்திய மாணவா்களைத் தயாா்படுத்துவதற்காக பிரிட்டனில் உள்ள தேசிய சுகாதார சேவை அமைப்பின் பாடத் திட்டத்துடன் இணைந்து இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தேசிய, சா்வதேச நிபுணா்களின் நேரடிப் பயிற்சி, ஆங்கில மொழித் திறன், மென் திறன் பயிற்சி, பிரிட்டனில் சுகாதாரப் பணிகளின் நோ்காணலுக்கான ஆயத்த பயிற்சிகள் ஆகியவை இந்தப் படிப்பில் பயிற்றுவிக்கப்படவுள்ளது.
இந்த திட்டம் சா்வதேச அளவில் சுகாதாரப் பணியாளா்களைத் தயாா்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும். உயிரி தொழில்நுட்பம், மரபணுசாா் படிப்புகள் தொடா்பான எம்எஸ்சி, எம்.டெக் பயிலும் மாணவா்கள் இதில் சேரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.