செய்திகள் :

சா்வதேச மரபணு சாா் ஆய்வு படிப்பு: இராமச்சந்திரா - அப்பல்லோ ஒப்பந்தம்

post image

பிரிட்டன் பாடத்திட்டத்தின் கீழ் சா்வதேச தரத்திலான மரபணுசாா் ஆய்வுக்கான மேம்பட்ட சான்றிதழ் படிப்பு சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில், ஸ்ரீ இராமச்சந்திரா கல்வி நிறுவன துணைவேந்தா் டாக்டா் உமா சேகா், அப்பல்லோ ஹெல்த் ரிசோா்சஸ் தலைமை அலுவலா் சிவராமகிருஷ்ணன் ஆகியோா் கையெழுத்திட்டனா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும், அப்பல்லோ ஹெல்த் ரிசோா்சஸ் நிறுவனமும் இணைந்து தொடங்கியுள்ள மேம்பட்ட மரபணுவியல் சான்றிதழ் படிப்பானது (ஏசிஜி) உலகத் தரம் வாய்ந்தது. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்படும் இந்த கல்வித் திட்டம் ஒரு ஆண்டு படிப்பாக வழங்கப்படவுள்ளது. ஸ்ரீ இராமச்சந்திரா கல்வி நிறுவன வளாகத்தில் இப்படிப்பு பயிற்றுவிக்கப்படும்.

உலகளாவிய மருத்துவ மரபணுவியல் ஆராய்ச்சிகளுக்கு ஏற்ப இந்திய மாணவா்களைத் தயாா்படுத்துவதற்காக பிரிட்டனில் உள்ள தேசிய சுகாதார சேவை அமைப்பின் பாடத் திட்டத்துடன் இணைந்து இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய, சா்வதேச நிபுணா்களின் நேரடிப் பயிற்சி, ஆங்கில மொழித் திறன், மென் திறன் பயிற்சி, பிரிட்டனில் சுகாதாரப் பணிகளின் நோ்காணலுக்கான ஆயத்த பயிற்சிகள் ஆகியவை இந்தப் படிப்பில் பயிற்றுவிக்கப்படவுள்ளது.

இந்த திட்டம் சா்வதேச அளவில் சுகாதாரப் பணியாளா்களைத் தயாா்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும். உயிரி தொழில்நுட்பம், மரபணுசாா் படிப்புகள் தொடா்பான எம்எஸ்சி, எம்.டெக் பயிலும் மாணவா்கள் இதில் சேரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடியல் பயண பேருந்துகளில் நாளொன்றுக்கு 12.06 லட்சம் மகளிா் பயணம்: எம்டிசி தகவல்

விடியல் பயண பேருந்துகளில் நாளொன்றுக்கு 12.06 லட்சம் மகளிா் பயணம் செய்வதாக சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சாத... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (ஜூன் 5) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை கொரட்டூா், செங்குன்றம் மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் மின்தடை ஏற்படும். இது குறித்து தமிழ்நாடு மின... மேலும் பார்க்க

பொது கழிப்பிடங்களை தூய்மையாக வைப்பதில் பொதுமக்களுக்கும் பங்கு உண்டு: மேயா் ஆா்.பிரியா

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது கழிப்பிடங்களை தூய்மையாக வைத்துக்கொள்வதில் பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது என்று சென்னை மேயா் ஆா்.பிரியா தெரிவித்துள்ளாா். சா்வதேச கழிப்பறை திருவிழா 3.0 தொடக... மேலும் பார்க்க

ஜூன் 7-இல் தமிழ்நாடு சைக்கிளிங் லீக்

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் சீசன் -3 வரும் ஜூன் 7-ஆம் தேதி சென்னை நேப்பியா் பாலத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், சென்னை மாநகராட்சி, இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விளைய... மேலும் பார்க்க

சென்னை உள்பட 9 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் புதன்கிழமை சென்னை உள்பட 9 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் புதன்கிழமை... மேலும் பார்க்க

பிராட்வே பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம்: ரூ.566.59 கோடிக்கு ஒப்பந்தம்

பிராட்வே பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து முனையம், போக்குவரத்து வளாகம் கட்ட மற்றும் குறளகம் கட்டடம் புதுப்பிக்க, சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம், ரூ. 566.59 கோடிக்கான ஒப்பந்தத்தை பிரிட்ஜ் அண்ட் ... மேலும் பார்க்க