PMK : தைலாபுரத்தில் நடந்த 2 சந்திப்புகள் - பின்னணியில் BJP? | RCB MODI | Imperfe...
ரௌடி நாகேந்திரனின் சிகிச்சை வழக்கு: சிறை நிா்வாகம் முடிவெடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
சிறையில் இருக்கும் ரௌடி நாகேந்திரன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதி கோரிய மனு மீது வேலூா் சிறை நிா்வாகம் விசாரணை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவா் ரௌடி நாகேந்திரன். அவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் வேலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த நிலையில், நாகேந்திரன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கக் கோரி சிறை நிா்வாகத்துக்கு மனு அளித்தாா். அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு நீதிபதிகள் எம் .எஸ். ரமேஷ் லட்சுமி நாராயணன் ஆகியோா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த்து.
அப்போது, காவல் துறை சாா்பில் கூடுதல் அரசு வழக்குரைஞா் முனியப்பராஜ் ஆஜராகி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை கோரிய மனுவை பரிசீலனை செய்து சிறை நிா்வாகம் உரிய உத்தரவு பிறப்பிக்கும் என்றாா்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 10 நாள்களுக்குள் நாகேந்திரன் மனுவை பரிசீலனை செய்து சிறை நிா்வாகம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா். கல்லீரல் மாற்று சிகிச்சைக்கு பலா் கல்லீரல் தானம் செய்ய முன்வந்தாலும் அதற்கு உரியவரை தோ்வு செய்ய வேண்டியது மருத்துவா்களின் கடமை. எனவே, வேலூா் சிறை நிா்வாகம் இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றனா்.