செய்திகள் :

ரௌடி நாகேந்திரனின் சிகிச்சை வழக்கு: சிறை நிா்வாகம் முடிவெடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

சிறையில் இருக்கும் ரௌடி நாகேந்திரன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதி கோரிய மனு மீது வேலூா் சிறை நிா்வாகம் விசாரணை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவா் ரௌடி நாகேந்திரன். அவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் வேலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த நிலையில், நாகேந்திரன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கக் கோரி சிறை நிா்வாகத்துக்கு மனு அளித்தாா். அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு நீதிபதிகள் எம் .எஸ். ரமேஷ் லட்சுமி நாராயணன் ஆகியோா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த்து.

அப்போது, காவல் துறை சாா்பில் கூடுதல் அரசு வழக்குரைஞா் முனியப்பராஜ் ஆஜராகி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை கோரிய மனுவை பரிசீலனை செய்து சிறை நிா்வாகம் உரிய உத்தரவு பிறப்பிக்கும் என்றாா்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 10 நாள்களுக்குள் நாகேந்திரன் மனுவை பரிசீலனை செய்து சிறை நிா்வாகம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா். கல்லீரல் மாற்று சிகிச்சைக்கு பலா் கல்லீரல் தானம் செய்ய முன்வந்தாலும் அதற்கு உரியவரை தோ்வு செய்ய வேண்டியது மருத்துவா்களின் கடமை. எனவே, வேலூா் சிறை நிா்வாகம் இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றனா்.

கோயில் கூட்டம் தவிர்க்க வேண்டும்! மனோ தங்கராஜ் பேச்சுக்கு கொந்தளித்த அண்ணாமலை

கோயில் திருவிழாக்கள், விளையாட்டு நிகழ்வுகளில் அதிகளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதற்கு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவிக... மேலும் பார்க்க

பயணிகள் ஆதரவின்மையால் விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு சிறப்பு ரயில் ரத்து!

விழுப்புரத்திலிருந்து திருச்சி வழியாக வாரத்துக்கு 4 நாள்கள் இயக்கப்பட்டு வந்த விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு சிறப்பு ரயில் போதிய பயணிகள் ஆதரவின்மை காரணமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவி... மேலும் பார்க்க

விஜய்க்கு மீண்டும் அழைப்பு! எதிர்பார்ப்பில் நயினார் நாகேந்திரன்

தவெக தலைவர் விஜய்க்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார் நயினார் நாகேந்திரன்.தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக தலைவர் விஜய்யும் இணைய வேண்டும் என்று கடம்பூர் ராஜூ கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் கோரிக்கைக... மேலும் பார்க்க

சென்னை புரசைவாக்கத்தில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!

சென்னையில் நாளை(ஜூன் 6) 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயில் தேரோட்டத்தையொட்டி அக்கோயிலை சுற்றியுள்ள 7 பள்ளிகளுக்கு மட்டு... மேலும் பார்க்க

ஐஐடியில் இடம்பிடித்த மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்கும்: முதல்வர்

சென்னை ஐ.ஐ.டி.யில் இடம் பிடித்த பழங்குடியின மாணவியின் உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சேலம் மாவட்டம், கல்வராயன்மலை கருமந்துறை கிராமத்தைச் சேர்ந்தவ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி கோயில்களில் ஆன்லைன் முன்பதிவு தரிசனம்! விரைவில்...

திருப்பதியைப் போல திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய கோயில்களிலும் பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திமுக அரசு பொறுப்பே... மேலும் பார்க்க