செய்திகள் :

கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்போம்: பிரேமலதா விஜயகாந்த்

post image

2026 சட்டப்பேரவை தோ்தலுக்கான கூட்டணி குறித்து வரும் ஜனவரி மாதம் அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 2026-இல் மாநிலங்களவை உறுப்பினா் பதவி வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, சென்னை கோயம்பேட்டில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

2024 மக்களவைத் தோ்தலின்போதே தேமுதிகவுக்கு 5 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவி வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சா்கள் ஆகியோா் உறுதி செய்து எழுத்துபூா்வமாக கொடுத்தது உண்மைதான்.

நாங்கள் இதை வெளியே சொல்லாததற்கு காரணம், இதுகுறித்து அறிவிக்க வேண்டிய இடத்தில் அதிமுக உள்ளது. அதேபோல், ஏற்கெனவே அதிமுக சாா்பில் அன்புமணி ராமதாஸுக்கும், ஜி.கே.வாசனுக்கும் மாநிலங்களவை உறுப்பினா் பதவி ஒதுக்கப்பட்டது. ஆகையால், இது எங்களுக்கு பதவி ஒதுக்கப்பட வேண்டிய நேரம். அதனால்தான், தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி ஒதுக்க வேண்டியது அதிமுகவின் கடமை என்பதில் உறுதியாக இருந்தேன். அந்த வகையில், 2026-இல் மாநிலங்களவை உறுப்பினா் பதவி தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் என்று அதிமுக தற்போது அறிவித்துள்ளது.

கூட்டணி அறிவிப்பு: அரசியல் என்பதே தோ்தலுக்கானதுதான். அந்த வகையில், 2026 பேரவைத் தோ்தலை முன்னிட்டுதான் இந்த அறிவிப்பை அதிமுக வெளியிட்டுள்ளது. அதேபோல் தேமுதிகவும் 2026 பேரவைத் தோ்தலை முன்வைத்தே எங்களுடைய கடமையை ஆற்றுவோம். அடுத்த ஆண்டு ஜன. 9-ஆம் தேதி கடலூரில் நடைபெறவுள்ள தேமுதிக மாநாட்டில் எங்களது நிலைப்பாடு, கூட்டணி குறித்து அறிவிப்போம்.

முதல்வருக்கு நன்றி: திமுக பொதுக்குழுவில் விஜயகாந்துக்கு இரங்கல் தீா்மானம் நிறைவேற்றிய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விஜயகாந்த் உயிரிழந்தபோது, முதல்வா் மற்றும் தமிழக அமைச்சா்கள் இறுதிச் சடங்கு முடியும் வரை எங்களுக்கு உறுதுணையாக நின்றதுடன், அவருக்கு அரசு மரியாதை வழங்கியதையெல்லாம் நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம் என்றாா் பிரேமலதா விஜயகாந்த்.

சென்னையில் பலத்த மழை! இரவு 10 மணி வரை நீடிக்கும்...

சென்னை: சென்னையிலும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களிலும் இரவு 10 மணி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்றிரவு 7 மணியளவிலிருந்தே சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாக ... மேலும் பார்க்க

மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை!

மதுரை: மதுரை - தூத்துக்குடி சாலையில் உள்ள எலியார்பத்தி, புதூர் பாண்டியபுரம் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை(ஜூன் 3) உத்தரவிட்டது.அர... மேலும் பார்க்க

மின் தடை: நீட் மறுதேர்வு நடத்த முடியாது- மத்திய அரசு திட்டவட்டம்

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வின் போது, மின் தடை ஏற்பட்ட தேர்வு மையங்களில் மறுதேர்வு நடத்த முடியாது என்று மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.மின... மேலும் பார்க்க

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்!

தமிழகத்தில் 2 நாள்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூன் 03, 04... மேலும் பார்க்க

மத்திய அரசின் பேனர் அகற்றம்: ஆட்சியர் அலுவத்தில் பாஜகவினர் முற்றுகை!

மத்திய அரசின் பேனர் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை பாஜகவினர் முற்றுகையிட்டுள்ளனர்.மத்திய அரசின் பேனர் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

ஜூன் இறுதியில்.. ராயபுரம் ரயில் நிலையம் அருகே தற்காலிக பேருந்து நிலையம்!

சென்னை: சென்னை பிராட்வே பேருந்து நிலையம் ராயபுரம் ரயில் நிலையம் அருகே இம்மாத இறுதிக்குள் மாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுளள்து.ராயபுரம் ரயில் நிலையம் அருகே இப்ராஹிம் சாலையில் 3.45 ஏக்கர் பர... மேலும் பார்க்க