செய்திகள் :

மதுரை திமுக பொதுக்குழு கூட்டத்தில் முகக்கவசம் அணிந்துவர அறிவுரை

post image

மதுரையில் நாளை (ஜீன் 1) நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் முகக்கவசம் அணிந்துவர அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

திமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் 50 வயது கடந்த நிர்வாகிகள் தங்களது பாதுகாப்புக்காக முகக்கவசம் அணிந்து பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மதுரை மாவட்ட பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில், கட்சியின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் மதுரையில் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் என அதன் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அறிவித்தாா்.

இதையடுத்து, மதுரை உத்தங்குடியில் சுமாா் 20 ஏக்கரில் குளிரூட்டப்பட்ட வசதியுடன் சுமாா் 10 ஆயிரம் போ் அமரும் வகையிலான பிரம்மாண்டமான அரங்கம், 100 போ் அமரக் கூடிய அளவில் கூட்ட மேடை, 2 ஆயிரத்துக்கும் அதிகமானோா் ஒரே நேரத்தில் உணவருந்தும் வகையிலான உணவுக் கூடம், வாகன நிறுத்துமிடங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

மதராஸி படப்பிடிப்பு நிறைவு!

மேலும், சென்னை அண்ணா அறிவாலயத்தைப் போன்ற வடிவிலான முகப்புத் தோற்றமும், கூட்ட அரங்கத்தின் முன்பாக மேடையுடன் 100 அடி உயரத்தில் திமுக கொடிக் கம்பமும் அமைக்கப்பட்டுள்ளன.

காலை 10 மணியளவில் தொடங்கும் இந்தக் கூட்டம், பகல் ஒரு மணி வரை நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், தோ்தலுக்கு முந்தைய திமுக மாநிலப் பொதுக் குழு கூட்டம் என்பதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

கோவில்பட்டியில் பெண் உள்பட 2 பேர் கொலை

கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெண் உட்பட 2 பேரை கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில் 6 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ... மேலும் பார்க்க

காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம்!

சென்னை: தமிழகத்தில் இன்று கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம் என கடலூர் முதன்மை கல்வி அலுவலகம் அறிவுரை வழங்கியிருக்கிறது.கோடை விடும... மேலும் பார்க்க

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்பட்டன. தமிழக பள்ளிக்கல்வியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 3 முதல் ஏப். 15 ... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: இன்று தண்டனை விபரம் அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு இன்று (ஜூன் 2) தண்டனை விபரம் அறிவிக்கப்பட உள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழ... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கோயிலில் காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் தொடக்கம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவ... மேலும் பார்க்க

கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்போம்: பிரேமலதா விஜயகாந்த்

2026 சட்டப்பேரவை தோ்தலுக்கான கூட்டணி குறித்து வரும் ஜனவரி மாதம் அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 2026-இல் மாநிலங்களவை உறுப்பி... மேலும் பார்க்க