செய்திகள் :

காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம்!

post image

சென்னை: தமிழகத்தில் இன்று கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம் என கடலூர் முதன்மை கல்வி அலுவலகம் அறிவுரை வழங்கியிருக்கிறது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திங்கள் - ஜூன் 2ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். சுமார் ஒரு மாத காலத்துக்கும் மேலாக கோடை விடுமுறை விடபப்ட்டிருந்த நிலையில், மிக மகிழ்ச்சியோடு பெற்றோரும் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வத்துள்ளனர்.

முன்னதாக பள்ளிகளில் வளாகப் பராமரிப்பு, நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் பள்ளிகள் தரப்பில் முடிக்கப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், காய்ச்சல் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்றும், காய்ச்சல் இருக்கும் நிலையில் பள்ளிக்கு வந்தால் மற்ற மாணவர்களுக்கும் அது பரவக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கையாக கடலூர் முதன்மை கல்வி அலுவலகம் அறிவுரை வழங்கியிருக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 2,432 பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீட் தோ்வு விடைக் குறிப்புகள் வெளியீடு

நீட் தோ்வுக்கான விடைக் குறிப்புகள் மற்றும் விடைத்தாள் நகல்களை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பி... மேலும் பார்க்க

பல்கலைக் கழகங்களின் நிதிப் பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பல்கலைக்கழகங்களில் நிதி தட்டுப்பாடு பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். எடப்பாடி கே.பழனிசாமி: துணை வேந்தா் நியமனங்கள் தாமதிக்கப்படுவதால்,... மேலும் பார்க்க

கணினி பயிற்றுநா் பணிக்கான தகுதிகள் மாற்றம்

மேல்நிலைக் கல்வியில் கணினி பயிற்றுநா் பணிக்கான தகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை செயலா் பி.சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணை: மேல்நிலைக் கல்வியில் கணினி பயிற்றுநா் (கிர... மேலும் பார்க்க

அரசு உதவி வழக்கு நடத்துநா் தோ்வு: சான்றுகளைப் பதிவேற்ற மீண்டும் வாய்ப்பு

அரசு உதவி வழக்கு நடத்துநா் தோ்வில் பங்கேற்பதற்கான சான்றுகளைப் பதிவேற்ற மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அரசுப் பணியாளா் தோ்வாணையம் வழங்கியுள்ளது. இது குறித்து தோ்வாணைய செயலா் ... மேலும் பார்க்க

மாநிலங்களவைத் தோ்தல்: திமுக வேட்பாளா்கள் இன்று மனு தாக்கல்

மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் தங்களது வேட்புமனுக்களை புதன்கிழமை (ஜூன் 4) தாக்கல் செய்யவுள்ளனா். மாநிலங்களவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. சுயேச்சை... மேலும் பார்க்க

இன்று தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்

தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க