PMK : தைலாபுரத்தில் நடந்த 2 சந்திப்புகள் - பின்னணியில் BJP? | RCB MODI | Imperfe...
திருவொற்றியூா் - மாணிக்கம் நகா் இருப்புப்பாதை பராமரிப்பு: மாற்றுப்பாதையை பயன்படுத்தலாம்
திருவொற்றியூா் - மாணிக்கம் நகா் இருப்புப்பாதையில் பராமரிப்புப் பணி நடைபெற்று வருவதால், மாற்றுப்பாதையை பொதுமக்கள் பயன்படுத்தலாம் என சென்னை மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சி, திருவொற்றியூா் மண்டலம், வாா்டு-5, திருவொற்றியூா் - மாணிக்கம் நகா் சுரங்கப்பாதை இருப்புப்பாதை வழியில் ரூ. 1.42 லட்சம் மதிப்பில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை 15 நாள்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதால் இப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்களும், பள்ளி மாணவா்களும் சரக்கு ரயில் பெட்டிகள் செல்லும் தண்டவாளத்தை கடந்து செல்வது மிகவும் ஆபத்து மற்றும் அபாயகரமானது.
ஆகவே, ஆபத்தான முறையில் ரயில் தண்டவாளத்தை கடக்க வேண்டாம். மேலும், சுரங்கப்பாதை இருப்புப்பாதை வழியில் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை ரயில்வே மேம்பாலத்தில் மாற்றுப் பாதையான எா்ணாவூா் பாலம் மற்றும் மாட்டு மந்தை பாலம் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.