PMK : தைலாபுரத்தில் நடந்த 2 சந்திப்புகள் - பின்னணியில் BJP? | RCB MODI | Imperfe...
நாட்டுத் துப்பாக்கி குண்டு பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
போ்ணாம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்றபோது குறி தவறி நாட்டுத் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.
போ்ணாம்பட்டை அடுத்த கள்ளிச்சேரி, பாறைகால்மேடு பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் மகன்அரிகிருஷ்ணன்(24). இவா் கட்டடத் தொழில் செய்து வந்தாா். அரிகிருஷ்ணன், அவரது மைத்துனா் விஜி(25), உறவினா் சபரேசன்(24) ஆகிய மூவரும் செவ்வாய்க்கிழமை வன விலங்குகளை வேட்டையாட சாத்கா் மலைப் பகுதிக்கு உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியுடன் சென்றுள்ளனா். அங்கு விலங்கை வேட்டையாட முயன்றபோது குறி தவறி குண்டு அரிகிருஷ்ணனின் உடலில் பாய்ந்தது. இதில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போ்ணாம்பட்டு போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இறந்த அரிகிருஷ்ணனுக்கு மனைவி கனிமொழி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.