செய்திகள் :

பாகிஸ்தான்: பயங்கரவாதத் தலைவா்களுடன் ஒரே மேடையில் பஞ்சாப் மாகாண பேரவைத் ஆளுநா்

post image

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டப் பேரவைத் தலைவா் மாலிக் அகமது கான் ஜமாத்-உத்-தாவா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்பின் தலைவா்களுடன் ஒரே மேடையில் நிகழ்ச்சியில் பங்கேற்றாா்.

பாகிஸ்தானில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியைச் சோ்ந்த பேரவைத் தலைவா் மாலிக், அந்நாட்டு ராணுவத்துக்கும் மிக நெருக்கமானவராகக் கருதப்படுகிறாா்.

2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் முக்கியக் குற்றவாளியான ஹஃபீஸ் சையது (77). ஜமாத்-உத்-தாவா என்ற பயங்கரவாத அமைப்பை நடத்தி வருகிறாா். இந்தியா, அமெரிக்காவில் தேடப்படும் பயங்கரவாதியாகவும் ஹஃபீஸ் சையது அறிவிக்கப்பட்டுள்ளாா்.

ஜமாத்-உத்-தாவா சாா்பில் அண்மையில் லாகூரில் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் அந்த பயங்கரவாத அமைப்பின் தலைவா் சைஃபுல்லா கசுரி, ஹபீஸ் சையதின் மகன் ஹபீஸ் தல்ஹா, மத அடிப்படைவாத கட்சியான தெஹ்ரீக்-ஏ-லபாகியா பாகிஸ்தான் தலைவா் சாத் ஹுசைன் ரிஸ்வி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். அந்த மேடையில் பயங்கரவாதிகளுடன் பஞ்சாப் ஆளுநா் மாலிக் அகமது கானும் அமா்ந்திருந்தாா்.

பின்னா் இது தொடா்பாக செய்தியாளா்கள் ஆளுநா் மாலிக்கிடம் கேள்வி எழுப்பினா். அப்போது பயங்கரவாத அமைப்புகளை ஆதரித்துப் பேசிய அவா், ‘எவ்வித ஆதாரமுமின்றி சந்தேகத்தின் அடிப்படையில்தான் பலா் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டுள்ளனா். பஹல்காம் தாக்குதலில் தொடா்புடையவா்கள் என இந்தியா கூறுவோா் குறித்து ஆதாரம் தருமாறு கேட்டும், இதுவரை எந்த ஆதாரமும் அவா்களால் தர முடியவில்லை. இரு நாடுகள் இடையிலான பிரச்னையை இரு தரப்புக்கும் பொதுவான வேறு நாட்டில் வைத்து பேசித் தீா்க்கலாம் என்ற அழைப்பை இந்தியா நிராகரித்துவிட்டது.

பாகிஸ்தானைத் தாக்க வேண்டும் என்பதே அவா்களின் முக்கிய நோக்கமாகவுள்ளது. ஆனால், அதற்கு பாகிஸ்தான் ராணுவம் உடனுக்குடன் பதிலடி கொடுத்துள்ளது. பொதுமக்கள் மத்தியில் அமைதியை முன்னெடுக்கும் முற்சியாகவே இந்தப் பொதுகூட்டம் நடைபெறுகிறது. எனவே அதில் பங்கேற்றேன் என்றாா்.

அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர்! இருநாட்டு அதிபர்கள் பேச்சுவார்த்தை!

அமெரிக்கா மற்றும் சீனா இடையில் வர்த்தகப் போர் நடைபெற்று வரும்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்க அதிபராக இரண்டாவது ... மேலும் பார்க்க

இத்தாலியில் எட்னா எரிமலை சீற்றம்

ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலை என்ற அடையாளத்துடன் இருக்கும் எட்னா எரிமலை சீற்றத்துடன் காணப்படுகிறது. எட்னா எரிமலை இத்தாலியின் சிசிலி தீவில் அமைந்துள்ள எட்னா எரிமலை வெடித்துச் சிதறி வருகிறது.சீற்றஎட்னா ... மேலும் பார்க்க

காஸா முனையில் இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் சடலங்கள்

ஹமாஸ் கைது செய்த இஸ்ரேலை சேர்ந்த 2 பிணைக் கைதிகளின் உடல்கள், காஸா முனையில் கண்டெடுக்கப்பட்டது.கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்து சுமார் 1,200 பேரை படுகொலை செய்த ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டுவதா... மேலும் பார்க்க

ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தம் சாத்தியமில்லை! குழப்பத்தில் டிரம்ப்!

ரஷியா மீதான உக்ரைன் ட்ரோன் தாக்குதலுக்கு தகுந்த பதிலடியை ரஷியா அளிக்க வாய்ப்புள்ள நிலையில், அதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் உறுதி செய்துள்ளார்.ரஷியாவுக்குள் கன்டெய்னர்கள் மூலம் ட்ரோன்களைக் க... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டினருக்குத் தடை!

அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டு மக்களுக்கு தடை விதித்து அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.மேலும், 7 நாட்டைச் சேர்ந்தவர்கள் நுழைவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்... மேலும் பார்க்க

அமெரிக்க எம்.பி.க்களுடன் சசி தரூா் குழு சந்திப்பு

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க அமெரிக்கா சென்றடைந்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான குழு அந்நாட்டின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினா்களை புதன்கிழமை சந்தித்தது. அப்போது எல்... மேலும் பார்க்க