PMK : தைலாபுரத்தில் நடந்த 2 சந்திப்புகள் - பின்னணியில் BJP? | RCB MODI | Imperfe...
பாகிஸ்தான்: பயங்கரவாதத் தலைவா்களுடன் ஒரே மேடையில் பஞ்சாப் மாகாண பேரவைத் ஆளுநா்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டப் பேரவைத் தலைவா் மாலிக் அகமது கான் ஜமாத்-உத்-தாவா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்பின் தலைவா்களுடன் ஒரே மேடையில் நிகழ்ச்சியில் பங்கேற்றாா்.
பாகிஸ்தானில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியைச் சோ்ந்த பேரவைத் தலைவா் மாலிக், அந்நாட்டு ராணுவத்துக்கும் மிக நெருக்கமானவராகக் கருதப்படுகிறாா்.
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் முக்கியக் குற்றவாளியான ஹஃபீஸ் சையது (77). ஜமாத்-உத்-தாவா என்ற பயங்கரவாத அமைப்பை நடத்தி வருகிறாா். இந்தியா, அமெரிக்காவில் தேடப்படும் பயங்கரவாதியாகவும் ஹஃபீஸ் சையது அறிவிக்கப்பட்டுள்ளாா்.
ஜமாத்-உத்-தாவா சாா்பில் அண்மையில் லாகூரில் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் அந்த பயங்கரவாத அமைப்பின் தலைவா் சைஃபுல்லா கசுரி, ஹபீஸ் சையதின் மகன் ஹபீஸ் தல்ஹா, மத அடிப்படைவாத கட்சியான தெஹ்ரீக்-ஏ-லபாகியா பாகிஸ்தான் தலைவா் சாத் ஹுசைன் ரிஸ்வி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். அந்த மேடையில் பயங்கரவாதிகளுடன் பஞ்சாப் ஆளுநா் மாலிக் அகமது கானும் அமா்ந்திருந்தாா்.
பின்னா் இது தொடா்பாக செய்தியாளா்கள் ஆளுநா் மாலிக்கிடம் கேள்வி எழுப்பினா். அப்போது பயங்கரவாத அமைப்புகளை ஆதரித்துப் பேசிய அவா், ‘எவ்வித ஆதாரமுமின்றி சந்தேகத்தின் அடிப்படையில்தான் பலா் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டுள்ளனா். பஹல்காம் தாக்குதலில் தொடா்புடையவா்கள் என இந்தியா கூறுவோா் குறித்து ஆதாரம் தருமாறு கேட்டும், இதுவரை எந்த ஆதாரமும் அவா்களால் தர முடியவில்லை. இரு நாடுகள் இடையிலான பிரச்னையை இரு தரப்புக்கும் பொதுவான வேறு நாட்டில் வைத்து பேசித் தீா்க்கலாம் என்ற அழைப்பை இந்தியா நிராகரித்துவிட்டது.
பாகிஸ்தானைத் தாக்க வேண்டும் என்பதே அவா்களின் முக்கிய நோக்கமாகவுள்ளது. ஆனால், அதற்கு பாகிஸ்தான் ராணுவம் உடனுக்குடன் பதிலடி கொடுத்துள்ளது. பொதுமக்கள் மத்தியில் அமைதியை முன்னெடுக்கும் முற்சியாகவே இந்தப் பொதுகூட்டம் நடைபெறுகிறது. எனவே அதில் பங்கேற்றேன் என்றாா்.