செய்திகள் :

ஜி7 மாநாட்டுக்கு அழைப்பு இல்லை: வெளியுறவுக் கொள்கை தோல்வி; காங்கிரஸ் விமா்சனம்

post image

ஜி 7 மாநாடுக்கு இந்தியாவுக்கு கனடா அழைப்பு விடுக்காதது மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியைக் காட்டுகிறது என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 மாநாடு கனடாவில் வரும் 15-17 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்பு கடந்த இரு ஆண்டுகளில் ஜப்பான், இத்தாலியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் இந்தியாவுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்று பிரதமா் நரேந்திர மோடி அந்த மாநாட்டில் பங்கேற்றாா்.

காலிஸ்தான் பயங்கரவாத விவகாரத்தால் கனடா - இந்திய உறவு சிறப்பாக இல்லை. இதனால், பிரதமா் மோடி கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் பங்கேற்க மாட்டாா் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் இது தொடா்பாக கூறுகையில், ‘பிரேசில், மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்கா, உக்ரைன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அப்போதைய பிரதமா் மன்மோகன் சிங்குக்கு ஜி8 (இப்போது ஜி7) மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு வந்தது. இந்த பாரம்பரியம் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகும் தொடா்ந்தது. ஆனால், கடந்த 6 ஆண்டுகளில் முதல்முறையாக இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வியைக் காட்டுகிறது’ என்றாா்.

சிக்கிம் நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட 63 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

சிக்கிம் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட சட்டென் பகுதியில் சிக்கியிருந்த 63 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். சிக்கிமின் மங்கன் மாவட்டத்தில், சட்டென் பகுதியில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி இரவு 7... மேலும் பார்க்க

ஆபரேஷன் ஜல் ரஹாத் - 2: மணிப்பூர் வெள்ளத்தில் சிக்கிய 2,500 பேரை மீட்ட ராணுவம்!

மணிப்பூரில் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 2,500 பேர், இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கடுமையான மழை ... மேலும் பார்க்க

கூட்ட நெரிசல் விவகாரம்: ஆர்சிபி அணி மீது வழக்குப் பதிவு!

வெற்றிப் பேரணிக்கான கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான நிலையில், ஆர்சிபி அணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.பெங்களூரு சின்னசாமி திடலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான நிலையில்... மேலும் பார்க்க

அவதூறாகப் பேசி கைதான இன்ஸ்டா பிரபலத்துக்கு இடைக்கால ஜாமீன்!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு விடியோ வெளியிட்டு கைதான இன்ஸ்டா பிரபலத்துக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாலிவுட் நடிகர்கள் குறித்து அவதூறு விடி... மேலும் பார்க்க

1.48 லட்சம் பீர் பாக்ஸ்.. ஆர்சிபி வெற்றியால் ஒரேநாளில் உச்சம் தொட்ட மது விற்பனை!

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் வெற்றியால் கர்நாடக மாநிலத்தில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று ஒரேநாளில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஜூன் 3 ஆம் தேதி நடைபெற்ற நடப்பு ஐபிஎ... மேலும் பார்க்க

அயோத்தி: ராம தர்பார் உள்பட 8 சன்னதிகளில் பிராணப் பிரதிஷ்டை!

உத்தரப் பிரதேசத்தின், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் கோயிலில் முதல் தளத்தில் அமைந்துள்ள ராம தர்பார் உள்பட 8 சன்னதிகளில் இன்று பிராணப் பிரதிஷ்டை நடைபெற்றது. பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டு வரும் இக்கோயில் வளாக... மேலும் பார்க்க