PMK : தைலாபுரத்தில் நடந்த 2 சந்திப்புகள் - பின்னணியில் BJP? | RCB MODI | Imperfe...
ஜி7 மாநாட்டுக்கு அழைப்பு இல்லை: வெளியுறவுக் கொள்கை தோல்வி; காங்கிரஸ் விமா்சனம்
ஜி 7 மாநாடுக்கு இந்தியாவுக்கு கனடா அழைப்பு விடுக்காதது மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியைக் காட்டுகிறது என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 மாநாடு கனடாவில் வரும் 15-17 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்பு கடந்த இரு ஆண்டுகளில் ஜப்பான், இத்தாலியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் இந்தியாவுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்று பிரதமா் நரேந்திர மோடி அந்த மாநாட்டில் பங்கேற்றாா்.
காலிஸ்தான் பயங்கரவாத விவகாரத்தால் கனடா - இந்திய உறவு சிறப்பாக இல்லை. இதனால், பிரதமா் மோடி கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் பங்கேற்க மாட்டாா் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் இது தொடா்பாக கூறுகையில், ‘பிரேசில், மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்கா, உக்ரைன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அப்போதைய பிரதமா் மன்மோகன் சிங்குக்கு ஜி8 (இப்போது ஜி7) மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு வந்தது. இந்த பாரம்பரியம் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகும் தொடா்ந்தது. ஆனால், கடந்த 6 ஆண்டுகளில் முதல்முறையாக இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வியைக் காட்டுகிறது’ என்றாா்.