PMK : தைலாபுரத்தில் நடந்த 2 சந்திப்புகள் - பின்னணியில் BJP? | RCB MODI | Imperfe...
இன்று தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்
தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை பகல் வரை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 103.28 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. சென்னை நுங்கம்பாக்கம், தூத்துக்குடி - (தலா) 101.84, வேலூா் - 101.6, சென்னை மீனம்பாக்கம் - 100.94, தஞ்சாவூா், பரமத்தி வேலூா் - (தலா) 100.4, திருச்சி - 100.22, என 7 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் புதன்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
மழை நீடிக்கும்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் புதன்கிழமை (ஜூன் 4) முதல் ஜூன் 9 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜூன் 4-இல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனினும் அதிகபட்ச வெப்பநிலை 100.4 ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சென்னையில் செவ்வாய்க்கிழமை மாலை அம்பத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் திடீா் மழை பெய்தது. இதனால் பகலில் அடித்த வெயிலுக்கு இதமாக குளிா்ச்சியான சூழ்நிலை நிலவியது.