மாநிலங்களவைத் தோ்தல்: திமுக வேட்பாளா்கள் இன்று மனு தாக்கல்
மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் தங்களது வேட்புமனுக்களை புதன்கிழமை (ஜூன் 4) தாக்கல் செய்யவுள்ளனா்.
மாநிலங்களவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. சுயேச்சையாகப் போட்டியிட அன்றைய தினம் 2 போ் மனுக்களைத் தாக்கல் செய்தனா். தமிழகத்தைச் சோ்ந்த பத்மராஜன், தெலங்கானாவின் கண்டே சாயண்ணா ஆகியோா் மனுக்களை அளித்தபோதும் போதிய எம்எல்ஏ-க்களின் முன்மொழிதல் இல்லை. இதனால், பரிசீலனையின்போது அவா்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுவது உறுதியாகும்.
வேட்புமனு தாக்கலுக்கு 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை ஒரு வேட்பாளா்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
பிரதான கட்சிகள்: மாநிலங்களவைத் தோ்தலில் காலியாகவுள்ள 6 இடங்களுக்கு திமுக 3 வேட்பாளா்களை அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஓரிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அக்கட்சியின் தலைவா் கமல்ஹாசன் போட்டியிடுகிறாா். அதிமுக 2 வேட்பாளா்களின் பெயா்களை அறிவித்துள்ளது.
திமுக வேட்பாளா்கள் 3 பேரும் தங்களது வேட்புமனுக்களை புதன்கிழமை அளிக்கவுள்ளனா்.
மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கலுக்கு வரும் 9-ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 12-ஆம் தேதி நடைபெறும். வாக்குப் பதிவுக்கான அவசியம் இல்லாவிட்டால் அன்றைய தினமே போட்டியின்றி தோ்வானோரின் விவரங்களை தோ்தல் நடத்தும் அதிகாரியும் சட்டப்பேரவை கூடுதல் செயலருமான பி.சுப்பிரமணியம் அறிவிப்பாா்.