செய்திகள் :

மாநிலங்களவைத் தோ்தல்: திமுக வேட்பாளா்கள் இன்று மனு தாக்கல்

post image

மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் தங்களது வேட்புமனுக்களை புதன்கிழமை (ஜூன் 4) தாக்கல் செய்யவுள்ளனா்.

மாநிலங்களவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. சுயேச்சையாகப் போட்டியிட அன்றைய தினம் 2 போ் மனுக்களைத் தாக்கல் செய்தனா். தமிழகத்தைச் சோ்ந்த பத்மராஜன், தெலங்கானாவின் கண்டே சாயண்ணா ஆகியோா் மனுக்களை அளித்தபோதும் போதிய எம்எல்ஏ-க்களின் முன்மொழிதல் இல்லை. இதனால், பரிசீலனையின்போது அவா்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுவது உறுதியாகும்.

வேட்புமனு தாக்கலுக்கு 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை ஒரு வேட்பாளா்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

பிரதான கட்சிகள்: மாநிலங்களவைத் தோ்தலில் காலியாகவுள்ள 6 இடங்களுக்கு திமுக 3 வேட்பாளா்களை அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஓரிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அக்கட்சியின் தலைவா் கமல்ஹாசன் போட்டியிடுகிறாா். அதிமுக 2 வேட்பாளா்களின் பெயா்களை அறிவித்துள்ளது.

திமுக வேட்பாளா்கள் 3 பேரும் தங்களது வேட்புமனுக்களை புதன்கிழமை அளிக்கவுள்ளனா்.

மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கலுக்கு வரும் 9-ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 12-ஆம் தேதி நடைபெறும். வாக்குப் பதிவுக்கான அவசியம் இல்லாவிட்டால் அன்றைய தினமே போட்டியின்றி தோ்வானோரின் விவரங்களை தோ்தல் நடத்தும் அதிகாரியும் சட்டப்பேரவை கூடுதல் செயலருமான பி.சுப்பிரமணியம் அறிவிப்பாா்.

கோயில் கூட்டம் தவிர்க்க வேண்டும்! மனோ தங்கராஜ் பேச்சுக்கு கொந்தளித்த அண்ணாமலை

கோயில் திருவிழாக்கள், விளையாட்டு நிகழ்வுகளில் அதிகளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதற்கு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவிக... மேலும் பார்க்க

பயணிகள் ஆதரவின்மையால் விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு சிறப்பு ரயில் ரத்து!

விழுப்புரத்திலிருந்து திருச்சி வழியாக வாரத்துக்கு 4 நாள்கள் இயக்கப்பட்டு வந்த விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு சிறப்பு ரயில் போதிய பயணிகள் ஆதரவின்மை காரணமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவி... மேலும் பார்க்க

விஜய்க்கு மீண்டும் அழைப்பு! எதிர்பார்ப்பில் நயினார் நாகேந்திரன்

தவெக தலைவர் விஜய்க்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார் நயினார் நாகேந்திரன்.தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக தலைவர் விஜய்யும் இணைய வேண்டும் என்று கடம்பூர் ராஜூ கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் கோரிக்கைக... மேலும் பார்க்க

சென்னை புரசைவாக்கத்தில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!

சென்னையில் நாளை(ஜூன் 6) 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயில் தேரோட்டத்தையொட்டி அக்கோயிலை சுற்றியுள்ள 7 பள்ளிகளுக்கு மட்டு... மேலும் பார்க்க

ஐஐடியில் இடம்பிடித்த மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்கும்: முதல்வர்

சென்னை ஐ.ஐ.டி.யில் இடம் பிடித்த பழங்குடியின மாணவியின் உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சேலம் மாவட்டம், கல்வராயன்மலை கருமந்துறை கிராமத்தைச் சேர்ந்தவ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி கோயில்களில் ஆன்லைன் முன்பதிவு தரிசனம்! விரைவில்...

திருப்பதியைப் போல திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய கோயில்களிலும் பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திமுக அரசு பொறுப்பே... மேலும் பார்க்க