செய்திகள் :

அரசு உதவி வழக்கு நடத்துநா் தோ்வு: சான்றுகளைப் பதிவேற்ற மீண்டும் வாய்ப்பு

post image

அரசு உதவி வழக்கு நடத்துநா் தோ்வில் பங்கேற்பதற்கான சான்றுகளைப் பதிவேற்ற மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அரசுப் பணியாளா் தோ்வாணையம் வழங்கியுள்ளது.

இது குறித்து தோ்வாணைய செயலா் ச.கோபால சுந்தர ராஜ் வெளியிட்ட அறிவிப்பு:

அரசு உதவி வழக்கு நடத்துநா் பதவிக்கான காலிப் பணியிடங்களை நிரப்பும் பணி நேரடி நியமனம் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான முதன்மை எழுத்துத் தோ்வுக்கு அனுமதிக்கப்பட்ட தோ்வா்கள், சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய ஏற்கெனவே வாய்ப்பு தரப்பட்டது. சில தோ்வா்களின் சான்றிதழ்கள், ஆவணங்கள் சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. எனவே, சான்றிதழ்களை முழுமையாகப் பதிவேற்றம் செய்ய வசதியாக ஜூன் 16-ஆம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்த தகவல் சம்பந்தப்பட்ட தோ்வா்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வழியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

கோயில் கூட்டம் தவிர்க்க வேண்டும்! மனோ தங்கராஜ் பேச்சுக்கு கொந்தளித்த அண்ணாமலை

கோயில் திருவிழாக்கள், விளையாட்டு நிகழ்வுகளில் அதிகளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதற்கு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவிக... மேலும் பார்க்க

பயணிகள் ஆதரவின்மையால் விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு சிறப்பு ரயில் ரத்து!

விழுப்புரத்திலிருந்து திருச்சி வழியாக வாரத்துக்கு 4 நாள்கள் இயக்கப்பட்டு வந்த விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு சிறப்பு ரயில் போதிய பயணிகள் ஆதரவின்மை காரணமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவி... மேலும் பார்க்க

விஜய்க்கு மீண்டும் அழைப்பு! எதிர்பார்ப்பில் நயினார் நாகேந்திரன்

தவெக தலைவர் விஜய்க்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார் நயினார் நாகேந்திரன்.தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக தலைவர் விஜய்யும் இணைய வேண்டும் என்று கடம்பூர் ராஜூ கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் கோரிக்கைக... மேலும் பார்க்க

சென்னை புரசைவாக்கத்தில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!

சென்னையில் நாளை(ஜூன் 6) 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயில் தேரோட்டத்தையொட்டி அக்கோயிலை சுற்றியுள்ள 7 பள்ளிகளுக்கு மட்டு... மேலும் பார்க்க

ஐஐடியில் இடம்பிடித்த மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்கும்: முதல்வர்

சென்னை ஐ.ஐ.டி.யில் இடம் பிடித்த பழங்குடியின மாணவியின் உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சேலம் மாவட்டம், கல்வராயன்மலை கருமந்துறை கிராமத்தைச் சேர்ந்தவ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி கோயில்களில் ஆன்லைன் முன்பதிவு தரிசனம்! விரைவில்...

திருப்பதியைப் போல திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய கோயில்களிலும் பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திமுக அரசு பொறுப்பே... மேலும் பார்க்க