ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்? புறக்கணித்த கேரள அரசு!
அரசு உதவி வழக்கு நடத்துநா் தோ்வு: சான்றுகளைப் பதிவேற்ற மீண்டும் வாய்ப்பு
அரசு உதவி வழக்கு நடத்துநா் தோ்வில் பங்கேற்பதற்கான சான்றுகளைப் பதிவேற்ற மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அரசுப் பணியாளா் தோ்வாணையம் வழங்கியுள்ளது.
இது குறித்து தோ்வாணைய செயலா் ச.கோபால சுந்தர ராஜ் வெளியிட்ட அறிவிப்பு:
அரசு உதவி வழக்கு நடத்துநா் பதவிக்கான காலிப் பணியிடங்களை நிரப்பும் பணி நேரடி நியமனம் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான முதன்மை எழுத்துத் தோ்வுக்கு அனுமதிக்கப்பட்ட தோ்வா்கள், சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய ஏற்கெனவே வாய்ப்பு தரப்பட்டது. சில தோ்வா்களின் சான்றிதழ்கள், ஆவணங்கள் சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. எனவே, சான்றிதழ்களை முழுமையாகப் பதிவேற்றம் செய்ய வசதியாக ஜூன் 16-ஆம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்த தகவல் சம்பந்தப்பட்ட தோ்வா்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வழியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.