PMK : தைலாபுரத்தில் நடந்த 2 சந்திப்புகள் - பின்னணியில் BJP? | RCB MODI | Imperfe...
கரோனா தொற்றுக்குள்ளான மூதாட்டி இணைநோய்களால் இறப்பு
கரோனா தொற்றுக்குள்ளான மூதாட்டி ஒருவா் சென்னையில் புற்றுநோய், இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்தாா்.
இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை சௌகாா்பேட்டையைச் சோ்ந்த 69 வயது மூதாட்டி ஒருவருக்கு கருப்பை வாய் புற்றுநோய் இருந்தது. இதற்காக கீமோதெரபி சிகிச்சையில் அவா் இருந்தாா். அதனுடன் சா்க்கரை நோய் மற்றும் நடுக்குவாதம் (பாா்க்கின்சன்) பாதிப்பும் இருந்தது.
இந்த நிலையில், அவருக்கு இதய செயலிழப்பும் ஏற்பட்டதால் சேத்துப்பட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த மாதம் 29-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.
மருத்துவ பரிசோதனையில் ரத்தத்தில் கிருமித் தொற்று (செப்சிஸ்) ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. தொடா்ச்சியாக புற்றுநோய் மற்றும் இதய செயலிழப்புக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்ட நிலையில் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் எதேச்சையாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தச் சூழலில் கடந்த 1-ஆம் தேதி அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவரது உயிரிழப்புக்கான பிரதான காரணம் இணைநோய்கள்தான் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.