செய்திகள் :

மண்ணில் புதைக்கப்பட்ட ஏலக்காய் மூடைகள்; இலங்கைக்கு கடத்த முயன்ற தந்தை - மகனுக்கு போலீஸ் வலை!

post image

கடந்த சில ஆண்டுகளாக தமிழக கடலோர பகுதிகளில் இருந்து போதைப்பொருள்கள், கஞ்சா, கடல் அட்டை போன்றவை இலங்கைக்கு கள்ளத்தனமாக கடத்தப்பட்டு வருகின்றன. இவற்றுடன் தற்போது சமையலுக்குப் பயன்படுத்தும் விராலி மஞ்சள், ஏலக்காய் உள்ளிட்ட சமையல் பொருட்களுடன் பீடி சுற்றும் இலைகளும் மூடை மூடையாக கடத்தப்படுகின்றன. இலங்கையில் நிலவும் பொருளாதார மந்த நிலையில் அங்கு அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து உள்ளது. இதனால் இவற்றை இந்தியாவில் இருந்து கள்ளத்தனமாக கடத்தி சென்று அங்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதில் கடத்தல் புள்ளிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தங்கச்சிமடம் அய்யந்தோப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக ஏலக்காய் மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ராமநாதபுரம் ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குற்ற புலனாய்வுத்துறையினரும், தங்கச்சிமடம் தனிப்பிரிவு போலீஸாரும் தங்கச்சிமடம் அய்யந்தோப்பு பகுதியில் உள்ள சுரேஷ் என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டின் பின்புறம் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 7 மூடைகள் சிக்கியது.

ஏலக்காய் மூடைகள்

அந்த மூடைகளை பிரித்து பார்த்த போது ஒவ்வொரு மூடையிலும் தலா 25 கிலோ எடை கொண்ட 175 கிலோ ஏலக்காய் இருந்தது. இவற்றின் இலங்கை மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸார் தங்கச்சிமடம் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். மேலும் இவற்றை புதைத்து வைத்திருந்த அய்யந்தோப்பு பகுதியை சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது மகன் இனியன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். சுரேஷ் மீது தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் காவல் நிலையங்களில் பாஸ்போர்ட் ஆக்ட் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஏலக்காய் மூடைகள்

தூத்துக்குடி: கார் மோதி இளைஞர் பலி; வழக்கிலிருந்து தப்பிக்க காரை விற்ற நால்வர் சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சிலோன் காலனியைச் சேர்ந்தவர் ரவிராஜ்குமார். இவர், சொந்தமாக போர்வெல் லாரி வைத்துள்ளார். கடந்த 22-ம் தேதி இரவு தனது பைக்கில் தூத்துக்குடியில் இருந்து அவரது... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: போர்க்கப்பல்களை உளவு பார்த்த மும்பை பொறியாளர் கைது; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

மும்பை டாக்யார்டு கப்பல் கட்டும் தளத்தில் இந்தியக் கடற்படைக்குத் தேவையான போர்க்கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் தனியார் நிறுவனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அது போன்ற ஒரு தனியார் நிறுவனத்தில் பணி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: முன்னாள் காதலியுடனான உறவைத் தட்டிக்கேட்ட மனைவி; விஷ ஊசி போட்டுக் கொன்ற ராணுவ வீரர்

மகாராஷ்டிரா மாநிலம் துலே அருகில் உள்ள வால்வாடி என்ற இடத்தைச் சேர்ந்தவர் கபில் பாகுல். இவரது மனைவி பூஜா(38). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கபில் பாகுல் ராணுவத்தில் கிளார்க்காக இருக்கிறார... மேலும் பார்க்க

சென்னை: "உன் காதலியை மறந்துவிடு" - சினிமா உதவி இயக்குநரைக் கடத்திய கும்பல்; தட்டித் தூக்கிய போலீஸ்

சென்னை அரும்பாக்கம் கோலபெருமாள்பள்ளி தெருவில் வசித்து வருபவர் சினிமா இயக்குநர் சுசீந்திரன். இவரிடம் உதவி இயக்குநராக ராஜகுமரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.இவரைக் கடந்த 29.5.2025-ம் தேதி மதியம் முதல் கா... மேலும் பார்க்க

"குழந்தைகள் உடலில் சாத்தான்" - மகன்களை ஸ்கிப்பிங் கயிற்றால் அடித்த பாஸ்டர் தந்தை கைது; நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கிங்ஸ்லி(42).இவர் அந்தப் பகுதியில் உள்ள ரசல்ராஜ் அடுக்குமாடிக்குடியிருப்பு ஒன்றில் தனது மனைவி சஜினி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாடகைக்குக் குடியிர... மேலும் பார்க்க

நெல்லை: கணவரின் நடத்தையில் சந்தேகம்; கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது!

நெல்லை அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். ஆட்டோ டிரைவரான இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். கணவன், மனைவியிடையே கடந்த சில நாட்க... மேலும் பார்க்க