செய்திகள் :

நெல்லை: கணவரின் நடத்தையில் சந்தேகம்; கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது!

post image

நெல்லை அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். ஆட்டோ டிரைவரான இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். கணவன், மனைவியிடையே கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது. 25 நாட்களுக்கு முன்பு முத்துலட்சுமி கணவரிடம் தகராறு செய்து விட்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.  இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

பாலசுப்பிரமணியந் மனைவி முத்துலெட்சுமி

போலீஸார் 2 பேரையும் அழைத்து விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால், முத்துலட்சுமி கடந்த 4 நாட்களுக்கு முன் கணவர் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று காலை வீட்டில் பாலசுப்பிரமணியன் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது முத்துலட்சுமி தனது கணவர் மீது தண்ணீரை ஊற்றி எழுப்பினார். இதில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது முத்துலட்சுமி தான் ஏற்கனவே கொதிக்க வைத்து இருந்த எண்ணெய்யை பாலசுப்பிரமணியன் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது.

இதில் வயிற்றுப் பகுதியில் இருந்து கால் வரை அவரது உடல் வெந்தது. வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிவந்திபட்டி காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர்.

சிவந்திபட்டி காவல் நிலையம்

முதற்கட்ட விசாரணையில், பாலசுப்பிரமணியனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக முத்துலட்சுமி சந்தேகமடைந்தார். இதுதொடர்பாகவே அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றும் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் முத்துலட்சுமி கொதிக்கும் எண்ணெய்யை தனது கணவர் மீது ஊற்றியது தெரியவந்தது. இதுகுறித்து முத்துலட்சுமியை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி: கொலை வழக்கில் கைதானவர்களிடம் 18 பவுன் நகை, 1.50 லட்சம் பணம் கையாடல்- உதவி ஆய்வாளர் கைது

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ரத்தின சபாபதிபுரம் பகுதியில் ஒரு மனநல காப்பகம் செயல்பட்டு வந்தது. சூலூர் அருகே உள்ள கரவளி மாதப்பூர் பகுதியைச் சேர்ந்த வருண்காந்த் என்ற ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞர் இங்கு அன... மேலும் பார்க்க

Tiger: பைக்காரவை தொடர்ந்து முதுமலையில் இறந்து கிடந்த ஆண் புலி... தொடரும் சோகம்!

வங்கப் புலிகளின் வாழிடத்தில் உலக அளவில் மிக முக்கிய பகுதியாக நீலகிரி உயர்ச்சூழல் மண்டலம் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் முதுமலை& சத்தியமங்கலம் , கேரளாவின் முத்தங்கா, கர்நாடகாவின் பந்திப்பூர் ஆகிய... மேலும் பார்க்க

தூத்துக்குடி: கார் மோதி இளைஞர் பலி; வழக்கிலிருந்து தப்பிக்க காரை விற்ற நால்வர் சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சிலோன் காலனியைச் சேர்ந்தவர் ரவிராஜ்குமார். இவர், சொந்தமாக போர்வெல் லாரி வைத்துள்ளார். கடந்த 22-ம் தேதி இரவு தனது பைக்கில் தூத்துக்குடியில் இருந்து அவரது... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: போர்க்கப்பல்களை உளவு பார்த்த மும்பை பொறியாளர் கைது; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

மும்பை டாக்யார்டு கப்பல் கட்டும் தளத்தில் இந்தியக் கடற்படைக்குத் தேவையான போர்க்கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் தனியார் நிறுவனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அது போன்ற ஒரு தனியார் நிறுவனத்தில் பணி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: முன்னாள் காதலியுடனான உறவைத் தட்டிக்கேட்ட மனைவி; விஷ ஊசி போட்டுக் கொன்ற ராணுவ வீரர்

மகாராஷ்டிரா மாநிலம் துலே அருகில் உள்ள வால்வாடி என்ற இடத்தைச் சேர்ந்தவர் கபில் பாகுல். இவரது மனைவி பூஜா(38). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கபில் பாகுல் ராணுவத்தில் கிளார்க்காக இருக்கிறார... மேலும் பார்க்க

சென்னை: "உன் காதலியை மறந்துவிடு" - சினிமா உதவி இயக்குநரைக் கடத்திய கும்பல்; தட்டித் தூக்கிய போலீஸ்

சென்னை அரும்பாக்கம் கோலபெருமாள்பள்ளி தெருவில் வசித்து வருபவர் சினிமா இயக்குநர் சுசீந்திரன். இவரிடம் உதவி இயக்குநராக ராஜகுமரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.இவரைக் கடந்த 29.5.2025-ம் தேதி மதியம் முதல் கா... மேலும் பார்க்க