செய்திகள் :

மேற்கு வங்கம்: பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையுடன் சுற்றித்திரிந்த நபர் கைது

post image

மேற்கு வங்கத்தில் பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையுடன் சுற்றித்திரிந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தின் பசந்தி பகுதியில் உள்ள பரத்கரில் பிமல் மொண்டல் என அடையாளம் காணப்பட்ட நபர், தனது உறவுக்காரப் பெண்(மைத்துனி) நிதா மொண்டலைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

அந்த நபர், பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையை தூக்கிக்கொண்டு அப்பகுதியில் சுற்றித்திரிவதைக் கண்ட உள்ளூர்வாசிகள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். விசாரணையின் போது, ​​குற்றம் சாட்டப்பட்ட நபரும் அந்த பெண்ணும் அப்பகுதியில் உள்ள திடலில் இருந்தபோது சண்டை தொடங்கியிருக்கிறது.

வேலூர்: பச்சிளம் குழந்தை விரல் துண்டிப்பு! அலட்சியம் காட்டிய செவிலியர் மீது வழக்கு

திடீரென்று, குற்றம்சாட்டப்பட்டவர் கத்தியை எடுத்து அந்தப் பெண்ணைத் தாக்கயிருக்கிறார். தாக்குதலின் போது, ​​பெண்ணின் தலையை அவர் துண்டித்தார். பிறகு குற்றம்சாட்டப்பட்டவரே துண்டிக்கப்பட்ட தலையையும் கொல்லப் பயன்படுத்திய ஆயுதத்தையும் பிடித்துக்கொண்டு போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.

பெண்ணின் உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவரிடமிருந்து ஆயுதமும் கைப்பற்றப்பட்டது என்றார். சொத்து தொடர்பான சில பிரச்னைகளுக்காக குற்றம்சாட்டப்பட்டவருக்கும் அந்த பெண்ணிற்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக சனிக்கிழமை காலை போலீஸார் தெரிவித்தனர்.

ஆபரேஷன் சிந்தூா்: அரசிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை -மத்திய அமைச்சா் கஜேந்திர ஷெகாவத்

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக, அரசிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை; நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிா்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் மத்திய அரசு பதிலளிக்கத் தயாா் என்று மத்திய... மேலும் பார்க்க

உ.பி.யில் ரயிலைக் கவிழ்க்க சதி: ஓட்டுநா் சாமா்த்தியத்தால் விபத்து தவிா்ப்பு

உத்தர பிரதேசத்தில் தண்டவாளத்தின் குறுக்கே இரும்புக் கம்பி இருந்ததை ஓட்டுநா் முன்கூட்டியே கவனித்து அவசர கால ‘பிரேக்’கை பயன்படுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இது தொடா்பாக ரயில்வே காவல் துறை... மேலும் பார்க்க

இடைத்தோ்தலுக்காக 20 ஆண்டுகளில் முதல்முறையாக வாக்காளா் பட்டியல் திருத்தம்

நாட்டில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெற உள்ளதையொட்டி, வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக இடைத்தோ்தலையொட்டி... மேலும் பார்க்க

2 ஆண்டு சிறைத் தண்டனை எதிரொலி: உ.பி. எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி தகுதிநீக்கம்

உத்தர பிரதேசத்தில் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசிய வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி, சட்டப்பேரவையில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக அரசு வட்டாரங்கள் ஞாயி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ கட்டுரைப் போட்டி: பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு

பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய முப்படைகள் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை பற்றிய கட்டுரைப் போட்டி ஜூன் 1 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்று பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்று... மேலும் பார்க்க

மும்பையில் இந்திய ராணுவம் ஏற்பாட்டில் பாதுகாப்புப் பயிற்சி: படைகள் பங்கேற்பு

வளா்ந்துவரும் அச்சுறுத்தல்கள் மற்றும் தற்போதைய நெருக்கடியான பாதுகாப்பு சூழலுக்கு பதிலளிக்கும் வகையில், படைகளுக்கு இடையேயான பாதுகாப்புப் பயிற்சி மும்பையில் நடைபெற்ாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. ... மேலும் பார்க்க