செய்திகள் :

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரசு ஊழியர் கைது... காங்கிரஸைச் சாடும் பாஜக! - என்ன நடந்தது?

post image

பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) அமைப்புக்காக உளவு பார்த்ததாகக் கூறி, காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரின் முன்னாள் தனிப்பட்ட உதவியாளரும் தற்போதைய அரசு ஊழியருமான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மரில் உள்ள அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த சகூர் கான் மங்களியா என்பவர், 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது சிஐடி மற்றும் உளவுத்துறை சிறப்புப் பிரிவுகளால் கைதுசெய்யப்பட்டார். அவர் தற்போது மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.

முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ஷேல் முகமது - ராகுல் காந்தி
முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ஷேல் முகமது - ராகுல் காந்தி

சமீப காலமாக பாகிஸ்தான் தூதரக அதிகாரியுடனும், ஐ.எஸ்.ஐ அமைப்புடனும் தொடர்புகள் வைத்திருந்ததாகச் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, உளவுத்துறை அமைப்புகள் அவரது நடமாட்டத்தைப் பின்தொடர்ந்தன.

முக்கிய தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் காவல் கண்காணிப்பாளர் சுதிர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

கான், முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ஷேல் முகமதுவின் தனிப்பட்ட உதவியாளராக முன்பு பணியாற்றியுள்ளார். அவர்கள் இருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக பா.ஜ.க ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா, “பாகிஸ்தான் தொடர்புகள் காங்கிரஸ் கட்சியின் ரத்தத்தில் ஊறியுள்ளது” எனக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கானின் மொபைல் போனில் பல தெரியாத பாகிஸ்தான் எண்கள் இருப்பதை உளவுத்துறை கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவை எதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து கான் எந்தவித விளக்கமும் தரவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும், விசாரணையின்போது கான் கடந்த காலத்தில் 6–7 முறை பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

அவர் மொபைல் சாதனத்தில் ராணுவம் தொடர்பான காணொளிகள் போன்றவைக் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், சில முக்கிய பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளதையும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அவருடைய இரண்டு வங்கிக் கணக்குகள் உட்பட நிதி விவரங்களும் தற்போது தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது, மேலதிக விசாரணைக்காக கான் ஜெய்ப்பூரில் உள்ள மத்திய புலனாய்வு அமைப்புகளிடம் ஒப்படைக்கலாம் என்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா: "இந்திய எல்லைக்கு அருகில் செல்லாதீர்; மீறினால்..." - சீன தூதரக எச்சரிக்கையின் பின்னணி என்ன?

நேபாளத்திற்குச் சுற்றுலா செல்லும் சீனர்கள், இந்திய எல்லைப் பகுதியில் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறது நேபாள நாட்டில் உள்ள சீன தூதரகம். இந்தியா கடந்த சில மாதங்களாக எல்லைத் தாண்டி வருவோரைக் கட... மேலும் பார்க்க

"வேலையில்லா பட்டதாரிகளை கையிலெடுக்கும் காங்கிரஸ்... பாஜக-வுக்கு எதிராக 'தடாலடி' வியூகம்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலிருந்து, கட்சித் தலைமைக்கு அவ்வப்போது புகார் கடிதங்கள் பறப்பது வழக்கமானது. சமீபத்தில், வித்தியாசமாக ஆலோசனைக் கடிதம் ஒன்று டெல்லிக்குப் பறந்திருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ... மேலும் பார்க்க

"நம் போர் விமானங்களை பாகிஸ்தான் தாக்கியது உண்மை, ஆனால்..." - இந்திய ராணுவ அதிகாரி பேசியதென்ன?

இந்த மாதத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் உடனான தாக்குதலில் 'எண்ணிக்கைக் குறிப்பிடாமல்' போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதை இந்திய ராணுவம் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. "ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டது முக்கி... மேலும் பார்க்க

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் யார், யார்? தொடரும் இழுபறி; பின்னணி என்ன?

தமிழ்நாட்டிலிருந்து தேர்வான ஆறு மாநிலங்களவை எம்.பி-களின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவடைகிறது.பிரதிநிதித்துவ அடிப்படையில் தி.மு.க-வுக்குக் கிடைக்கும் நான்கு இடங்களை மூன்று தன்வசப்படுத்தி இருக்க... மேலும் பார்க்க