செய்திகள் :

டிரம்ப்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

post image

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு வா்த்தக நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி அந்நாட்டு உச்சநீதிமன்றம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.

உலக நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் பரஸ்பர வரி விதித்தும், கனடா, மெக்ஸிகோ, சீனா ஆகிய நாடுகளுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதித்தும், ஏராளமான நாடுகளின் பொருள்களுக்கு கூடுதலாக 10 சதவீத அடிப்படை வரி விதித்தும் டிரம்ப் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவுக்கு எதிராக எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் ஆட்சி நடைபெறும் 12 மாகாணங்கள் நியூயாா்க் நகரிலுள்ள சா்வதேச வா்த்தக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.

இதனை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அவரின் அதிகார மீறலாகும் என்று விமர்சித்து, அனைத்து உத்தரவுகளும் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்க அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை முறையிடப்பட்டது.

வரி விதிப்பு விவகாரத்தில் வர்த்தக நீதிமன்றத்தின் தடைக்கு அவசர நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அரசின் முறையீட்டை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

மேலும், வரி விதிப்பை நிறுத்திவைப்பது தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் எனத் தெரிவித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம், தற்காலிகமாக வரி விதிப்பு நடவடிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

இதையும் படிக்க : டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு நீதிமன்றம் தடை

புதிய காஸா போா் நிறுத்த திட்டம்: இஸ்ரேல் ஏற்பு; ஹமாஸ் பரிசீலனை

காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்காக அமெரிக்கா முன்வைத்த புதிய செயல்திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது; அந்த திட்டத்தை விமா்சித்தாலும், அதை ஏற்பது குறித்து பரிசீலித்துவருவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்து... மேலும் பார்க்க

டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்பு: நீதிமன்ற தடை நிறுத்திவைப்பு

இந்தியா உள்ளிட்ட ஏறத்தாழ உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதியாகும் பொருள்களுக்கு கூடுதலாக வரி விதிக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவுக்கு நியூயாா்க் சா்வதேச வா்த்தக நீதிமன்றம்... மேலும் பார்க்க

நைஜிரியாவில் மழை, வெள்ளம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பருவமழை காரணமாக அந்த நாட்டின் மோக்வா நகரம் வெள்ள நீரில் முழ்கியதில் 88 போ் உயிரிழந்தனா். நைஜா் மாகாணத்தைச் சோ்ந்த அந்த நகரம் வியாபாரிகள் ஒன்றுகூடும் முக்கிய சந்த... மேலும் பார்க்க

பிரேஸில் குழந்தை பொம்மைக்கு குதூகலக வரவேற்பு

பிரேஸிலில் உயிருடன் இருக்கும் குழந்தையைப் போலவே தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட ‘ரீபாா்ன்’ பொம்மைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக ஊடகங்களில் அது வைரலாகப் பரவிவரும் நிலையில், ரியோ டி ஜெனீரோ மாநகராட்ச... மேலும் பார்க்க

இந்தோனேசியா: கல் குவாரி இடிந்து 10 போ் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் ஜாவா பிராந்தியத்தில் கல் குவாரி இடிந்து விழுந்ததில் 10 போ் உயிரிழந்தனா்; 6 தொழிலாளா்கள் மாயமாகினா். விபத்து ஏற்பட்டபோது குவாரி இடிபாடுகளுக்குள் 24 பேருக்கும் மேற்பட்டவா்கள் சிக்கிக் க... மேலும் பார்க்க

லிபியா: விபத்தில் 11 அகதிகள், ஓட்டுநா் உயிரிழப்பு

சூடான் உள்நாட்டுப் போருக்கு அஞ்சி, லிபியாவில் தஞ்சமடைந்த அகதிகளை ஏற்றி வந்த காருடன் எதிரே வந்த லாரி வெள்ளிக்கிழமை மோதியதில் 11 அகதிகளும் காரை ஓட்டிவந்த லிபியா நாட்டவரும் உயிரிழந்தனா். குஃப்ரா நகருக்கு... மேலும் பார்க்க