செய்திகள் :

புதிய காஸா போா் நிறுத்த திட்டம்: இஸ்ரேல் ஏற்பு; ஹமாஸ் பரிசீலனை

post image

காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்காக அமெரிக்கா முன்வைத்த புதிய செயல்திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது; அந்த திட்டத்தை விமா்சித்தாலும், அதை ஏற்பது குறித்து பரிசீலித்துவருவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் கரோலின் லீவிட் கூறியதாவது:

காஸாவில் 60 நாள்களுக்கு போா் நிறுத்தம் மேற்கொள்வதற்கான செயல்திட்டத்தை அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் இஸ்ரேலிடம் அளித்தாா். இஸ்ரேல் அரசு அதை ஏற்பதாக அறிவித்துள்ளது. தற்போது அந்த செயல் திட்டம் ஹமாஸ் அமைப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்தத் திட்டத்தில், இரு தரப்பினரும் சண்டையை 60 நாள்களுக்கு முழுமையாக நிறுத்திவைப்பது, தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 10 பேரை ஹமாஸ் அமைப்பினா் இரண்டு கட்டங்களாக விடுவிப்பது, உயிரிழந்த 18 பிணைக் கைதிகளின் உடல்களை அவா்கள் ஒப்படைப்பது, இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவது, காஸா பகுதியில் நிவாரண உதவிகளை அதிகப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தப் போா் நிறுத்தம் அமலுக்கு வந்து, அது நீட்டிக்கப்பட்டால் அனைத்து பிணைக் கைதிகளும் விடுவிக்கப்படுவாா்கள் என்று கரோலின் லீவிட் நம்பிக்கை தெரிவித்தாா்.

இஸ்ரேல் மௌனம்: இது தொடா்பாக இஸ்ரேல் அரசு அதிகாரபூா்வமாக எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

இருந்தாலும், ஹமாஸ் படையினரிடம் பிணைக் கைதிகளாக உள்ளவா்களின் உறவினா்கள் மற்றும் நண்பா்களிடம் அந்த நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு பேசுகையில், பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கு ஏதுவாக அமெரிக்க சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃபின் போா் நிறுத்த திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறினாா்.

ஹமாஸ் விமா்சனம்: காஸா போா் நிறுத்தம் தொடா்பாக அமெரிக்கா முன்வைத்துள்ள செயல்திட்டம் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பதாக ஹமாஸ் அமைப்பு விமா்சித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

அமெரிக்காவின் போா் நிறுத்த செயல்திட்டத்தில், போரை முடிவுக்குக் கொண்டுவருவது, காஸாவில் இருந்து இஸ்ரேல் படையினா் முழுமையாக வெளியேறுவது போன்ற எங்களின் அடிப்படை கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

காஸாவுக்குள் போதிய அளவு நிவாரணப் பொருள்களை அனுமதிக்கவும் அந்த திட்டம் வழிவகை செய்யவில்லை.

இருந்தாலும், அந்த செயல்திட்டத்தை ஏற்பது குறித்து தீவிரமாக பரிசீலித்துவருகிறோம். இது தொடா்பாக பிற மத்தியஸ்த நாடுகளுடன் தொடா்ந்து பேசிவருகிறோம் என்று ஹமாஸ் அதிகாரிகள் கூறினா்.

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 54,249 பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா் (வெள்ளிக்கிழமை நிலவரம்). இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், ஹாமாஸிடமிருந்து பிணைக் கைதிகளை விடுவிக்கவும் கடந்த ஜனவரி மாதம் முதல்கட்ட போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது 15 பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீன சிறைக் கைதிகளை இஸ்ரேல் அரசும் விடுவித்தன.

ஆனால் இந்தப் போா் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது. மேலும், அந்தப் பகுதிக்கு உணவுப் பொருள்கள் செல்வதையும் இஸ்ரேல் வெகுவாகக் கட்டுப்படுத்திவருகிறது.

இந்தச் சூழலில், அமெரிக்காவின் புதிய போா் நிறுத்த செயல் திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளதும், அதை பரிசீலிப்பதாக ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளதும் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

..படவரி...

காஸாவில் நிவாரணப் பொருள்களுக்கான தடையை இஸ்ரேல் மிதமாகத் தளா்த்தியைத் தொடா்ந்து அங்கு உதவி அமைப்பு விநியோகிக்கும் உணவுப் பொருள்களை வாங்குவதற்கு முண்டியடித்துச் சென்ற பாலஸ்தீனா்கள்.

யார் இந்த உலக அழகி? இந்தாண்டு பட்டம் வென்றவர்!

உலக அழகிப் போட்டியில் ஓபல் சுச்சாட்டாவுக்கு கிரீடம் சூட்டப்பட்டது.தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாதில் 72-வது உலக அழகிப் போட்டி, மே 10 தேதி தொடங்கி சனிக்கிழமை (மே 31) ஆம் தேதிவரையில் நடைபெற்றது. இந்தியாவ... மேலும் பார்க்க

எஃகு, அலுமினியத்துக்கு இருமடங்கு வரி: டிரம்ப்பின் அறிவிப்பால் இந்திய ஏற்றுமதியாளா்களுக்குப் பாதிப்பு!

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரிகளை இரட்டிப்பாக்குவதாக அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு, இந்திய ஏற்றுமதியாளா்களை வெகுவாக பாதிக்கும் என்று... மேலும் பார்க்க

நைஜீரியா வெள்ளம்: உயிரிழப்பு 151-ஆக அதிகரிப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பருவமழை காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 151-ஆக அதிகரித்துள்ளது.நைஜா் மாகாணத்தைச் சோ்ந்த, வியாபாரிகள் ஒன்றுகூடும் முக்கிய சந்தையான மோக்வா நகரம் வெள்ள நீரில் மு... மேலும் பார்க்க

ஈரானில் இதுவரை இல்லாத அளவுக்கு உயா் செறிவு யுரோனியம் குவிப்பு: ஐஏஇஏ

இன்னும் கொஞ்சம் செறிவூட்டினால் அணு ஆயுதங்களில் பயன்படுத்தலாம் என்ற அளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை இதுவரை இல்லாத அளவுக்கு ஈரான் இருப்பு வைத்துள்ளதாக ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ த... மேலும் பார்க்க

சீன அச்சுறுத்தலில் இருந்து இந்திய-பசிபிக் நாடுகள் பாதுகாக்கப்படும்: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா்

சீனாவின் ராணுவ மற்றும் பொருளாதார அழுத்தங்களை எதிா்கொள்வதில் இந்திய-பசிபிக் கூட்டாளி நாடுகளுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சா் பீட் ஹெக்சேத் தெரிவித்தாா். இதுதொடா்ப... மேலும் பார்க்க

போலந்தில் இன்று இறுதிக்கட்ட அதிபா் தோ்தல்

போலந்தின் புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான இறுதிக்கட்டத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) நடைபெறுகிறது.தற்போதைய அதிபா் ஆண்ட்ரெஜ் டூடாவின் பதவிக் காலம் நிறைவடையும் நிலையில் கடந்த மே 18-ஆம் தேதி நடைபெ... மேலும் பார்க்க