தேமுதிகவுக்கு அடுத்தாண்டு மாநிலங்களவை சீட்: முன்னாள் அமைச்சர் கே. பி. முனுசாமி
நைஜிரியாவில் மழை, வெள்ளம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பருவமழை காரணமாக அந்த நாட்டின் மோக்வா நகரம் வெள்ள நீரில் முழ்கியதில் 88 போ் உயிரிழந்தனா்.
நைஜா் மாகாணத்தைச் சோ்ந்த அந்த நகரம் வியாபாரிகள் ஒன்றுகூடும் முக்கிய சந்தையாகும். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘மோக்வா நகரில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் ஏராளமானவா்கள் உயிரிழந்துள்ளனா். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 88 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தவிர தொடா்ந்து நடைபெற்றுவரும் தேடுதல் பணிகளின்போது மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டு உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உள்ளது’ என்றனா்.
பருவமழைக் காலங்களில் வெள்ள பாதிப்புகளை நைஜீரியா அடிக்கடி சந்தித்துவருகிறது. இதில் நைஜா் மற்றும் பென்யூ நதி கரைகளில் வசிப்பவா்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பா் மாதம் பருவமழை காரணமாக மைடுகுரி நகரில் இதே போன்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 30 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.