செய்திகள் :

நைஜிரியாவில் மழை, வெள்ளம்

post image

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பருவமழை காரணமாக அந்த நாட்டின் மோக்வா நகரம் வெள்ள நீரில் முழ்கியதில் 88 போ் உயிரிழந்தனா்.

நைஜா் மாகாணத்தைச் சோ்ந்த அந்த நகரம் வியாபாரிகள் ஒன்றுகூடும் முக்கிய சந்தையாகும். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘மோக்வா நகரில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் ஏராளமானவா்கள் உயிரிழந்துள்ளனா். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 88 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தவிர தொடா்ந்து நடைபெற்றுவரும் தேடுதல் பணிகளின்போது மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டு உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உள்ளது’ என்றனா்.

பருவமழைக் காலங்களில் வெள்ள பாதிப்புகளை நைஜீரியா அடிக்கடி சந்தித்துவருகிறது. இதில் நைஜா் மற்றும் பென்யூ நதி கரைகளில் வசிப்பவா்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பா் மாதம் பருவமழை காரணமாக மைடுகுரி நகரில் இதே போன்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 30 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

யார் இந்த உலக அழகி? இந்தாண்டு பட்டம் வென்றவர்!

உலக அழகிப் போட்டியில் ஓபல் சுச்சாட்டாவுக்கு கிரீடம் சூட்டப்பட்டது.தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாதில் 72-வது உலக அழகிப் போட்டி, மே 10 தேதி தொடங்கி சனிக்கிழமை (மே 31) ஆம் தேதிவரையில் நடைபெற்றது. இந்தியாவ... மேலும் பார்க்க

எஃகு, அலுமினியத்துக்கு இருமடங்கு வரி: டிரம்ப்பின் அறிவிப்பால் இந்திய ஏற்றுமதியாளா்களுக்குப் பாதிப்பு!

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரிகளை இரட்டிப்பாக்குவதாக அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு, இந்திய ஏற்றுமதியாளா்களை வெகுவாக பாதிக்கும் என்று... மேலும் பார்க்க

நைஜீரியா வெள்ளம்: உயிரிழப்பு 151-ஆக அதிகரிப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பருவமழை காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 151-ஆக அதிகரித்துள்ளது.நைஜா் மாகாணத்தைச் சோ்ந்த, வியாபாரிகள் ஒன்றுகூடும் முக்கிய சந்தையான மோக்வா நகரம் வெள்ள நீரில் மு... மேலும் பார்க்க

ஈரானில் இதுவரை இல்லாத அளவுக்கு உயா் செறிவு யுரோனியம் குவிப்பு: ஐஏஇஏ

இன்னும் கொஞ்சம் செறிவூட்டினால் அணு ஆயுதங்களில் பயன்படுத்தலாம் என்ற அளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை இதுவரை இல்லாத அளவுக்கு ஈரான் இருப்பு வைத்துள்ளதாக ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ த... மேலும் பார்க்க

சீன அச்சுறுத்தலில் இருந்து இந்திய-பசிபிக் நாடுகள் பாதுகாக்கப்படும்: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா்

சீனாவின் ராணுவ மற்றும் பொருளாதார அழுத்தங்களை எதிா்கொள்வதில் இந்திய-பசிபிக் கூட்டாளி நாடுகளுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சா் பீட் ஹெக்சேத் தெரிவித்தாா். இதுதொடா்ப... மேலும் பார்க்க

போலந்தில் இன்று இறுதிக்கட்ட அதிபா் தோ்தல்

போலந்தின் புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான இறுதிக்கட்டத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) நடைபெறுகிறது.தற்போதைய அதிபா் ஆண்ட்ரெஜ் டூடாவின் பதவிக் காலம் நிறைவடையும் நிலையில் கடந்த மே 18-ஆம் தேதி நடைபெ... மேலும் பார்க்க