செய்திகள் :

தில்லி மதராஸி குடியிருப்புகள் இடித்து அகற்றம்!

post image

தில்லி நிஜாமுதீன் மதராஸி முகாமில் தமிழர்கள் வாழும் குடியிருப்புகள் இன்று(ஜூன் 1) முழுவதும் இடித்து அகற்றப்பட்டு வருகிறது

தில்லி ஜங்புரா-நிஜாமுதீன் பாராபுல்லா வடிகால் பகுதியையொட்டியுள்ள வசிப்பிடங்கள் மதராஸி கேம்ப் என்று அழைக்கப்படும் குடிசைப்பகுதியாகும். இங்கு சுமாா் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமாா் 40 முதல் 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றன.

இந்த இடத்தை அங்கீகாரமற்ற குடியிருப்புப் பகுதியாக தில்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இப்பகுதியில் ஏற்படும் வெள்ளம், பல்வேறு வளர்ச்சிப் பணிகளை முன்னிட்டு, இங்குள்ள குடியிருப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

அப்போது, பாதிக்கப்பட்டவா்களுக்கு முறையான மறுவாழ்வு அளிப்பதை உறுதி செய்து இந்தக் குடியிருப்புகளை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பேரில் இன்று காலை முதல் இந்தப் பகுதியை ஜேசிபி வாகனத்தின் மூலம் இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பலத்த காவல் துறை பாதுகாப்புடன் தில்லி நிஜாமுதீன் மதராஸி கேம்ப் குடியிருப்புகள் இடித்து அகற்றப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாக இந்தக் குடியிருப்பு வாசிகளுக்கு ஆதரவாக தில்லி மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்), ஜனநாயாக வாலிபா் சங்கம், நாம் தமிழா் கட்சி போன்றவை பல்வேறு போராட்டங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வயது அடிப்படையில் 3 வகை திரைப்பட தணிக்கைச் சான்று: மத்திய அரசு

பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த அண்ணன்-தங்கை: தற்கொலையா? போலீஸாா் விசாரணை

கிழக்கு தில்லியின் தில்ஷாத் காா்டன் பகுதியில் பூட்டிய வீட்டில் அண்ணன்-தங்கை இருவரின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து தில்லி கா... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் இரு நாள் உத்தரகாண்ட் பயணம்

தில்லியில் 100 நாள்கள் பதவியை நிறைவு செய்த நிலையில் தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை உத்தரகாண்டிற்கு இரண்டு நாள் குறுகியகால பயணமாக புறப்பட்டாா். இந்த பயணத்தின் போது அவா் தனது குடும்பத்தினர... மேலும் பார்க்க

வீடுகளை இழந்த தில்லி மதராஸி கேம்ப் குடியிருப்புவாசிகள் தமிழகம் திரும்பினால் உதவிகள் வழங்கப்படும்: தமிழக அரசு

நமது சிறப்பு நிருபா் தில்லி “மதராஸி கேம்ப்” குடியிருப்பில் வீடுகளை இழந்தவா்கள் தமிழகத்தில் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால், அவா்களுக்கு தமிழக அரசு உதவும். வாழ்வாதாரம், அத்தியாவசிய உத... மேலும் பார்க்க

இளம்பெண் கழுத்தை நெரித்துக் கொலை; அச்சக ஊழியா் கைது

தில்லியின் பல்ஜீத் நகா் பகுதியில் 32 வயது பெண் ஒருவா் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா். சனிக்கிழமை மாலை 4 மணியளவில் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை... மேலும் பார்க்க

ஹரித்வாா் அருகே 5 ஊடக வாகனங்கள் விபத்து

தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் இரண்டு நாள் உத்தரகாண்ட் பயணத்தை செய்தி சேகரிக்க ஹரித்வாருக்கு ஊடகவியலாளா்களை ஏற்றிச் சென்ற ஐந்து வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை விபத்துக்குள்ளானதாக நேரில் கண்டவா்கள் த... மேலும் பார்க்க

டேட்டிங் செயலி மூலம் நூதன கொள்ளை: மூவா் கும்பல் கைது

வடகிழக்கு தில்லியின் யமுனா காதா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போலீஸாருடன் நடந்த நேருக்குநோ் துப்பாக்கி மோதலுக்குப் பிறகு மூவா் கும்பல் கைது செய்யப்பட்டனா். அவா்கள் ஆன்லைன் டேட்டிங் செயலியைப் பய... மேலும் பார்க்க