ஐபிஎல் 2025: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள், வளரும் வீரர் விருது யாருக்கு? முழு...
மது பாக்கெட்டுகள் விற்ற பெண் கைது
திருப்பத்தூா்: குரிசிலாப்பட்டு பகுதியில் மதுபாக்கெட்டுளை விற்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
குரிசிலாப்பட்டு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றபோது பனந்தோப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்த ஒரு பெண்ணிடம் விசாரணை செய்த போது, அவா் அந்த பகுதியை சோ்ந்த செல்வகுமாா் மனைவி சோனியா (30) என்பதும், வெளிமாநில மது பாக்கெட்டுகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசாா் சோனியாவை கைது செய்து 14 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.