செய்திகள் :

மிகவும் நொந்துவிட்டேன்..! தோல்விக்குப் பிறகு பஞ்சாப் கேப்டன்!

post image

ஐபிஎல் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றது குறித்து பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேசும்போது, “பாதி வேலைதான் முடிந்துள்ளது. அடுத்த ஆண்டு நிச்சயமாக கோப்பையை வெல்ல வருவோம்” எனக் கூறியுள்ளார்.

ஐபிஎல் சீசனில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் கிங்ஸை இறுதிப் போட்டிக்கு ஷ்ரேயாஸ் அழைத்து வந்தார். இறுதியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி கோப்பையை வென்றது.

ரன்னர் அப் விருதைப் பெற்ற ஷ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக ரூ.12.50 கோடியைப் பரிசாகப் பெற்றார்.

குவாலிஃபயர் 2-இல் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் இறுதிப் போட்டியில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். தோல்வி குறித்து அவர் பேசியதாவது:

மிகவும் நொந்துவிட்டேன்

உண்மையை சொல்ல வேண்டுமானால் மிகவும் நொந்துவிட்டேன். ஆனால், பஞ்சாப் அணி வீரர்கள் விளையாட விதத்தை நினைத்து மகிழ்கிறேன்.

மாசற்ற அணியாக இல்லாவிட்டாலும் அணி நிர்வாகம், உதவியாளர்கள், இந்த அணிக்காக பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் இந்தப் புகழ் சென்று சேர வேண்டும். அவர்கள் இல்லாமல் நாங்கல் இங்கில்லை. அணி நிர்வாகியின் ஒத்துழைப்பும் மிகவும் அசத்தலானது.

கடைசி போட்டியுடன் இதை ஒப்பிடும்போது 200 ரன்கள் போதுமானதென நினைத்தேன். ஆர்சிபி நன்றாக பந்துவீசினார்கள். குறிப்பாக க்ருணால் பாண்டியா, அவர் தனது அனுபவத்தை பயன்படுத்தினார்.

பாதி வேலைதான் முடிந்திருக்கிறது...

பல இளைஞர்கள் தங்களது முதல் சீசனில் விளையாடினார்கள். இந்த சீசனில் இளைஞர்களின் பயமறியாத தன்மை மிகவும் அற்புதமாக இருந்தது.

இளைஞர்களுக்கு இந்தப் போட்டிகளின் மூலம் அனுபவம் கிடைத்திருக்கும். அடுத்தாண்டு இந்த அனுபவத்துடன் வருவார்கள். அத்துடன் சில திட்டங்களை வகுத்து நல்ல கிரிக்கெட்டை விளையாடுவோம்.

பாதி வேலைதான் முடிந்துள்ளது. அடுத்தாண்டு கோபையை வெல்ல மீண்டும் வருவோம் என்றார்.

அடுத்த சீசனில் 2 மடங்கு நன்றாக விளையாடுவேன்: வைபவ் சூர்யவன்ஷி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 14 வயதான வைபவ் சூர்யன்ஷி இந்த சீசனில் முதல்முறையாக விளையாடினார். 7 போட்டிகளில் 252 ரன்கள் குவித்துள்ள இவர் 206.6 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி அசத்தினார். இந்தப் போட்டிகளில் அத... மேலும் பார்க்க

கொண்டாட்டத்தை விட உயிர் முக்கியமானது: கபில் தேவ்

பெங்களூரில் நடைபெற்ற விபத்து குறித்து முன்னாள் வீரர் கபில் தேவ் கொண்டாட்டத்தை விட உயிர் முக்கியமானது எனக் கூறியுள்ளார். ஆர்சிபி அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக கோப்பை வென்றது. இதன் வெற்றிக் க... மேலும் பார்க்க

பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்! - ஆர்சிபி நிர்வாகம் அறிவிப்பு

வெற்றிப் பேரணி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படுமென ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங... மேலும் பார்க்க

முற்றிலும் உடைந்துவிட்டேன்: விராட் கோலி!

பெங்களூரு கூட்ட நெரிசலில் ரசிகர்கள் பலியான சம்பவத்துக்கு ஆர்சிபி வீரர் விராட் கோலி வருத்தம் தெரிவித்துள்ளார்.18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதால், பெங்களுரூவில் மாநில அரசு ... மேலும் பார்க்க

ஐபிஎல் போட்டியில் சாம்பியன்: விராட் கோலிக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு

ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி வீரா் விராட் கோலிக்கு, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் பு... மேலும் பார்க்க

பெங்களூரு சின்னசாமி திடலில் அத்துமீறும் ஆர்சிபி ரசிகர்கள்: போலீஸ் தடியடி!

பெங்களூரு சின்னசாமி திடலில் அத்துமீறி நுழைய முயன்ற ஆர்சிபி ரசிகர்கள் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி திடலில் ஐபிஎல் தொடர் 18-வது சீசனின் நேற்றிரவு நடைபெற்ற... மேலும் பார்க்க