ஜூலை 21 முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற ஜூலை 21 ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு அறிவித்துள்ளார்.
அதன்படி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் எனக் கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து அதுதொடர்பாக விவாதிக்க நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால் மழைக்கால கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுவதுடன் ஆபரேஷன் சிந்தூர் போன்றவை குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.