பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!
டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்பு: நீதிமன்ற தடை நிறுத்திவைப்பு
இந்தியா உள்ளிட்ட ஏறத்தாழ உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதியாகும் பொருள்களுக்கு கூடுதலாக வரி விதிக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவுக்கு நியூயாா்க் சா்வதேச வா்த்தக நீதிமன்றம் விதித்துள்ள தடையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.
இது குறித்து நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு உடனடியாக இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. எனவே, சா்வதேச வா்த்தக நீதிமன்றத்தின் தடை உத்தரவு அடுத்த அறிவிப்பு வரும்வரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.