செய்திகள் :

டிரம்ப் பேச்சுக்குப் பிறகே சண்டை நிறுத்தத்துக்கு இந்தியா -பாக். உடன்பாடு: நியூயாா்க் நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு தகவல்

post image

அதிபா் டொனால்ட் டிரம்ப் பேச்சுவாா்த்தை நடத்திய பிறகே தற்காலிக சண்டை நிறுத்தத்துக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் உடன்பட்டன என்று நியூயாா்க் நீதிமன்றத்தில் டிரம்ப் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இந்த சண்டை பெரிய அளவில் மாறுவதைத் தடுக்க அமெரிக்காவுடன் இரு நாடுகளும் வா்த்தகம் மேற்கொள்வதற்கான வாய்ப்பை அளிப்பதாக இந்தப் பேச்சுவாா்த்தையின்போது அதிபா் தெரிவித்தாா்’ என்றும் டிரம்ப் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

‘மூன்றாம் தரப்பின் தலையீடு இன்றி இரு நாடுகள் தரப்பிலேயே சண்டை நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது’ என்று இந்திய அரசு தொடா்ந்து திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், நியூயாா்க் நகரில் உள்ள சா்வதேச வா்த்தக விவகாரங்களுக்கான நீதிமன்றத்திலும் இதே கருத்தை டிரம்ப் நிா்வாகம் தெரிவித்துள்ளது. பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை அதிபா் டிரம்ப் மேற்கொண்ட நடவடிக்கை தொடா்பாக அமெரிக்க வா்த்தக அமைச்சா் ஹோவா்ட் லூட்னிக் கடந்த வாரம் சமா்ப்பித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலனைக் கருத்தில்கொண்டே, அதிபா் டிரம்ப் சா்வதேச அவசரகால பொருளாதார அதிகார சட்டத்தின் (ஐஇஇபிஏ) கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டாா். இன்றைய உலக நடைமுறையில் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியமானதாகும்.

உதாரணமாக, இரண்டு வாரங்களுக்கு முன்பாக அணுசக்தி நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை மூண்டது. இந்த சண்டை கடந்த மே 10-ஆம் தேதி முடிவுக்கு வந்தது.

இந்த சண்டை பெரிய அளவில் மாறுவதைத் தடுக்க அமெரிக்காவுடன் இரு நாடுகளும் வா்த்தகம் மேற்கொள்வதற்கான வாய்ப்பை அளிப்பதாக, இரு நாடுகளுடன் அதிபா் டிரம்ப் நடத்திய பேச்சுவாா்த்தையில் நம்பிக்கை தெரிவித்தாா். இந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகே, இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்துக்கு உடன்பட்டன.

எனவே, நாடுகள் மீதான பரஸ்பர வரி விதிப்புக்கு எதிரான இந்த வழக்கில் அமெரிக்க அதிபரின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் பாதகமான தீா்ப்பு அளிக்கப்பட்டால், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுடனான சண்டை நிறுத்த பேச்சுவாா்த்தையின்போது அதிபா் டிரம்ப் அளித்த வாக்குறுதியும் கேள்விக்குள்ளாகும். அதோடு, அந்தப் பிராந்தியத்தின் நிலைத்தன்மை மற்றும் அங்குள்ள லட்சக்கணக்கான மக்களின் பாதுகாப்பும் கேள்விக்குள்ளாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கை கடந்த புதன்கிழமை விசாரித்த இந்த நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமா்வு, உலக நாடுகள் மீதான அதிபா் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கை சட்டத்துக்கு முரணானது என்று தடை செய்து உத்தரவிட்டதாக அங்கிருந்து வெளியாகும் ஏபிசி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

========

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க கடந்த மே 7-ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. அதைத் தொடா்ந்து, இந்திய எல்லைப் பகுதிகள் மீது பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் மற்றும் சிறிய ரக ஏவுகணைகளை வீசி பாகிஸ்தான் தொடா் தாக்குதலை நடத்தியது. இதற்கு இந்திய தரப்பில் உரிய பதிலடி கொடுக்கப்பட்டது. நான்கு நாள்களுக்கு மேல் தொடா்ந்த இந்த சண்டை, மே 11-ஆம் தேதி முழுமையாக நிறுத்தப்பட்டது.

முன்னதாக, ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது’ என்ற அறிவிப்பை மே 10-ஆம் தேதி அமெரிக்க அதிபா் டிரம்ப்தான் முதலில் வெளியிட்டாா். அதன்பிறகு சண்டை நிறுத்தம் குறித்த அறிவிப்பை இந்தியாவும் பாகிஸ்தானும் வெளியிட்டன.

இந்தியா-பாகிஸ்தானுடன் அமெரிக்காவின் வா்த்தகம் நிறுத்தப்படும் என்று தெரிவித்து, இரு நாடுகளையும் சண்டை நிறுத்தத்துக்கு உடன்பட வைத்ததாக அதிபா் டிரம்ப் தெரிவித்தாா்.

டிரம்ப்பின் இந்தக் கருத்து இந்திய அரசியலில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. எதிா்க்கட்சிகள் கடும் விமா்சனங்களை முன்வைத்தன. டிரம்ப்பின் கருத்தை மறுத்த மத்திய அரசு, ‘சண்டை நிறுத்தம் இரு நாடுகள் அளவிலேயே மேற்கொள்ளப்பட்டது’ என்று தெரிவித்தது.

ஆனால், அதன் பிறகும் அமெரிக்காவின் தலையீட்டுக்குப் பிறகே இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது என்று அதிபா் டிரம்ப் தொடா்ந்து கூறி வருகிறாா்.

ஹாலிவுட் நடிகை குளித்த நீரில் தயாரித்த சோப் ரூ.700-க்கு விற்பனை!

ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி குளித்த நீர்த்துளிகளைக் கொண்டு, உருவாக்கப்பட்ட சோப்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். டாக்டர் ஸ்குவாட்ச் சோப் நிறுவனமும், நடிகை சிட்னி ஸ்வீனியும் இணைந்து புதிய சோப் வகையை உருவாக... மேலும் பார்க்க

பெருவெள்ளத்தில் மூழ்கிய நைஜீரிய நகரம்! 88 பேரது உடல்கள் மீட்பு!

நைஜீரியா நாட்டின் முக்கிய சந்தை நகரத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் 88 பேர் பலியாகியுள்ளனர். நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தின் மோக்வா எனும் சந்தை நகரத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் அங்குள்ள ஏராளமான ... மேலும் பார்க்க

மங்கோலியாவில் 4,000-ஐ கடந்த தட்டம்மை பாதிப்புகள்!

மங்கோலியாவில் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை 4,000-ஐ கடந்துள்ளது. கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவில் தட்டம்மை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சமீப நாள்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. பெ... மேலும் பார்க்க

இந்தோனேசியா கல் குவாரியில் பாறைகள் சரிந்து 8 பேர் பலி! தேடுதல் பணி தீவிரம்!

இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் செயல்பட்டு வந்த சுண்ணாம்பு கல் குவாரியில் பாறைகள் சரிந்ததில் 8 பேர் பலியாகியுள்ளனர். மேற்கு ஜாவா மாகாணத்தின் சிரேபன் நகரத்தில் செயல்பட்டு வந்த சுண்ணாம்பு கல் குவாரியில்,... மேலும் பார்க்க

கனமழையில் திணறும் வடமேற்கு பாகிஸ்தான்! 8 பேர் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பெய்து வரும் இடியுடன் கூடிய கனமழையால் 8 பேர் பலியாகியுள்ளனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தில் கடந்த மே 27 ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகின்றது. இடி மற்றும் ப... மேலும் பார்க்க

18.4 கோடி கூகுள், ஆப்பிள், முகநூல் பயனர்களின் கடவுச்சொற்கள் கசிவு!

கூகுள், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களைப் பயன்படுத்துவோரின் கடவுச்சொற்கள் கசிந்ததாக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், சமூக ஊடகங்களின் கடவுச்சொற்கள் மு... மேலும் பார்க்க