செய்திகள் :

மும்பை - குஜராத் மோதும் ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் மழை குறுக்கிட்டால் என்னாகும்?

post image

முல்லான்பூரில் நடைபெறும் ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் மழைக் குறுக்கிட்டால் மும்பை அணி வெளியேறுமென்பது அதன் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் போட்டிகள் தொடங்கியுள்ளன. நேற்று நடைபெற்ற குவாலிஃபயர் 1-இல் ஆர்சிபி வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

பஞ்சாபின் முல்லான்பூரில் இன்றிரவு எலிமினேட்டரில் மும்பை இந்தியன்ஸும் குஜராத் டைட்டன்ஸும் மோதுகின்றன.

5 முறை கோப்பை வென்ற மும்பையும் ஒருமுறை கோப்பை வென்ற குஜராத்தும் சமபலத்துடன் இருக்கின்றன.

மழைக்கு வாய்ப்பா?

முல்லான்பூரில் பகல் நேரத்தில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை நெருங்கி மாலையில் 20 டிகிரியாகக் குறையும். அதனால், சில இடங்களில் இடியுடன் கூடிய மழைப் பொழியுமென இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

அதேசமயத்தில், போட்டி நடைபெறும் நேரத்தில் (இரவு 7.30) மழைக்கான வாய்ப்பு இல்லை என அமெரிக்க வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

மழை வந்தால், மும்பை வெளியே!

ஒருவேளை மழைப் பொழிந்தால், அது மும்பைக்கு பாதகமாக அமையும். ஏனெனில் போட்டி ரத்தாகினால் ரிசர்வ் டே இல்லாததால் புள்ளிப் பட்டியலின் அடிப்படையில் 3-ஆம் இடத்தில் இருக்கும் குஜராத் வென்றதாக அறிவிக்கப்படும்.

மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மழை வராமல் இருக்க சமூக வலைதளங்களில் கடவுளை வேண்டிக்கொண்டிருக்கிறார்கள்.

ஹார்திக் பாண்டியாவுடன் மோதலா? என்ன சொல்கிறார் ஷுப்மன் கில்?!

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹார்திக் பாண்டியா மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கு ஷுப்மல் கில்... மேலும் பார்க்க

சக்கர நாற்காலியில் அமர்ந்து கிரிக்கெட் விளையாடிய ஏபிடி! வைரல் விடியோ!

ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் சக்கர நாற்காலியில் அமர்ந்து மாற்றுத் திறன் கொண்ட கிரிக்கெட் விளையாடி விடியோக்கள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.நடப்பு ஐபில் தொடர் இந்தியாவின்... மேலும் பார்க்க

ரூ.10 லட்சம் யாருக்கு? சிஎஸ்கே வீரர் நூர் அகமதை முந்திய பிரசித் கிருஷ்ணா!

குஜராத் டைட்டன்ஸ் வீரர் பிரசித் கிருஷ்ணா அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் நூர் அகமதை முந்தியுள்ளார். ஐபிஎல் 18-ஆவது சீசனில் பிளே ஆஃப்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குவாலிஃப்யர் 1-இல் ஆ... மேலும் பார்க்க

அதிர்ஷ்டம் ஆர்சிபி பக்கம் இருக்குமா? ஏபிடி வில்லியர்ஸ் கூறுவதென்ன?!

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பை வெல்லுமா? இல்லையா? என்பது குறித்து முன்னாள் ஆர்சிபி வீரர் ஏபிடி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை மட்... மேலும் பார்க்க

அதிர்ஷ்டம் குறித்து ரோஹித் சர்மா பேசியதென்ன?

ஆட்ட நாயகன் விருது வென்ற ரோஹித் சர்மா தனக்குக் கிடைத்த அதிர்ஷடத்தை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பேட்டியில் கூறியுள்ளார். ’எலிமினேட்டா்’ ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்த... மேலும் பார்க்க

சாதனை படைத்த தமிழன்..! ஐபிஎல் வரலாற்றில் இடம் பிடித்த சாய் சுதர்சன்!

ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சாய் சுதர்சனும் இணைந்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் (23 வயது) குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.... மேலும் பார்க்க