செய்திகள் :

`வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31 இல்ல!' - நீட்டிக்கப்பட்ட தேதி; காரணம் என்ன?

post image

ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய ஜூலை 31-ம் தேதியே கடைசி நாள். ஆனால், இந்த ஆண்டு (2025) கடைசி நாளை செப்டம்பர் 15-ம் தேதிக்கு மாற்றியுள்ளது மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT).

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான PORTAL கடந்தாண்டு ஏப்.16ம் தேதியே திறக்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு மே.27 -ம் தேதி ஆகியும் E Filing PORTAL திறக்காததால் லட்சக்கணக்கானோர் குழப்பம் அடைந்துள்ளனர். வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் பல மாற்றங்கள் செய்யப்படுவதால் தாமதம் ஏற்பட்டதாக கூறினர்.

இந்நிலையில், இதுகுறித்து CBDT வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்...

நீட்டிப்பிற்கு காரணம் என்ன?

2025-26 மதிப்பீட்டிற்கு ஆண்டுக்கான, புதிய ITR படிவங்கள் எளிமையாகவும், வெளிப்படையாகவும், துல்லியமாகவும் மாற்றப்பட்டுள்ளன.

வருமான வரி
வருமான வரி

இந்த மாற்றத்தால் வருமான வரி தாக்கல் செய்யப் பயன்படுத்தப்படும் அமைப்பு மற்றும் கருவிகளைப் புதுப்பிக்க கால அவகாசம் தேவைப்படுகிறது.

மேலும், 2025-ம் ஆண்டு மே 31-ம் தேதிக்குள் தெரிய வரும் TDS தகவல்கள், ஜூன் மாத ஆரம்பத்தில் தான் தெரியும். அதனால்,மக்களுக்கு ஜூலை 31-ம் தேதிக்குள் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய சிரமமாக இருக்கும். வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும் கடைசி தேதி மாற்றப்பட்டுள்ளது. இந்தக் கால அவகாச நீட்டிப்பின் மூலம் மக்கள் எளிதாகவும், சரியாகவும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய முடியும்".

நாட்றம்பள்ளி: முக்கிய பேருந்து நிறுத்தம்; ஆனால் நிழற்குடை? - கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள நாட்றம்பள்ளி பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இப்பகு... மேலும் பார்க்க

வேலூர்: சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளம்; அச்சத்தில் வாகன ஓட்டிகள் - அலட்சியம் வேண்டாமே அதிகாரிகளே!

வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு அருகே அமைந்திருக்கிறது, ஓங்கப்பாடி கிராமம். இந்த கிராமத்தின் அருகே வேலூரில் இருந்து ஒடுகத்தூர் செல்லும் சாலையின் ஓரத்தில் மிகப்பெரிய பள்ளம் தோண்டிப் போடப்பட்டிருக்கிறது.... மேலும் பார்க்க

Aadhar Card-ல் மாறும் கடைசிப் பெயர்; கடைசி நேரத்தில் ஏற்படும் குழப்பம் - தவிர்ப்பது எப்படி?!

வங்கி கணக்கில் எதாவது மாற்றம், டிக்கெட் பதிவு... எந்த இடத்திற்குச் சென்றாலும் முதலில் கேட்கப்படும் கேள்வி 'ஆதார் இருக்கிறதா?' என்பது தான். இன்று இந்திய மக்களின் வாழ்வில் ஆதார் இன்றியமையாத இடத்தைப் பிட... மேலும் பார்க்க

வாணியம்பாடி: கழிவறையின் அவலநிலையைச் சுட்டிக்காட்டிய விகடன்; நடவடிக்கை எடுத்த நகராட்சி!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரம், தோல் தொழிற்சாலைகள் நிறைந்த நெரிசல் மிகுந்த நகராட்சி ஆகும் . பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் வாகனங்களால் வாணியம்பாடி பேருந்து நிலையம் எப்போதும் நெரிசல் மிகுந்த... மேலும் பார்க்க

உ.பி: மருத்துவர், செவிலியர், படுக்கைக்கூட இல்லை... அரசு மருத்துவமனையில் தரையில் நடந்த பிரசவம்!

பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறப்பு என்பார்கள். கர்ப்பிணி என்றாலே எல்லோருக்கும் இயற்கையாகவே மனதில் ஒரு அன்பும், பரிவும் ஏற்பட்டுவிடும். அதனால்தான் ஒவ்வொரு மாநில அரசும் கர்ப்பிணிகளுக்கென பல திட்டங... மேலும் பார்க்க

'இந்தியா அடுத்து ஜெர்மனியை தாண்டுவது மட்டும் முக்கியமல்ல...' - ஆனந்த் மஹிந்திரா கூறுவது என்ன?

சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின் படி, இந்தியா ஜப்பானை முந்தி உலக அளவில் நான்காவது மிகப்பெரிய பொருளாதாரம் என்கிற இடத்தை பிடித்துள்ளது என்று நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணிய... மேலும் பார்க்க