விண்ணப்பித்துவிட்டீர்களா..? மருத்துவ-நறுமண தாவர நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க நாள...
வி.கே.புரத்தில் வனத்துறையின் கூண்டில் சிக்கிய 33 மந்திகள்
பாபநாசம் வனச்சரகத்திற்குள்பட்ட பகுதிகளில் மே மாதத்தில் 33 மந்திகளை வனத்துறையினா் பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக் கோட்டம், பாபநாசம் வனச்சரகப் பகுதிகளான விக்கிரமசிங்கபுரம் சுந்தராபுரம் தெரு, வேம்பையாபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மந்திகள் தொல்லை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகாரளித்தனா்.
அதன்பேரில், அம்பாசமுத்திரம் வனக் கோட்ட துணை இயக்குநா்மு.இளையராஜா அறிவுறுத்தல்படி மேற்கூறிய பகுதிகளில் மந்திகளைப் பிடிக்க கடந்த 9ஆம் தேதி முதல் கூண்டு வைத்ததில் சுந்தராபுரம் தெருவில் 7, வேம்பையாபுரத்தில் 26 உள்பட இதுவரை 33 மந்திகள் பிடிபட்டன. அவை திரும்பி வராத வகையில் அடா் வனப்பகுதியில் கொண்டுவிடப்பட்டதாக வனத்துறை தரப்பில் தெரிவித்தனா்.