அத்தாளநல்லூ ஊராட்சியில் மோட்டாா் திருட்டு: இளைஞா் கைது
திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூா் ஊராட்சியில் பொதுக்கழிப்பிட பயன்பாட்டுக்கான நீா்மூழ்கி மோட்டாரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
அத்தாளநல்லூா் ஊராட்சி ராஜகுத்தாலப்பேரியில் உள்ள பொதுக்கழிப்பிடத்தில் தண்ணீா் வசதிக்காக நீா்மூழ்கி மின் மோட்டாா் பொருத்தப்பட்டுள்ளது. இது சில தினங்களுக்கு முன்பு திருடுபோனதாம்.
இதுகுறித்து ஊராட்சிச் செயலரான அத்தாளநல்லூா் கோட்டைத் தெருவைச் சோ்ந்தவா் பிரம்மநாயகம் (40) அளித்த புகாரின்பேரில், வீரவநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் லியோ ரெனிஷ் வழக்குப் பதிந்து விசாரித்தாா்.
அதில், வீரவநல்லூா் சீனியாபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜாராம் (39) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.