பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் சேவை: தமிழக அரசு ஒப்புதல்!
பணகுடி அருகே பிடிபட்ட அரியவகை எறும்பு தின்னி
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே விவசாயி தோட்டத்தில் சனிக்கிழமை பிடிபட்ட அரியவகை எறுப்பு தின்னியை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
பணகுடி ரோஸ்மியாபுரம் மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதி மற்றும் தோட்டப் பகுதியில் அரியவகை எறும்பு தின்னி அதிக அளவில் காணப்படுகிறது. இந்த வகை எறும்பு தின்னி கரையான், எறும்பு மற்றும் சிறியவகை பூச்சிகளை உணவாக உண்டு வாழ்ந்து வருகின்றன. இவை ஏதேனும் சத்தம், ஆள் நடமாட்டம் தெரிந்தால் தனது உடலை பந்து போன்று சுருட்டி மறைத்துக்கொள்ளும்.
இந்த அரிய வகை எறும்புதின்னி, புஷ்பவனத்தில் உள்ள விவசாயியின் தோட்டத்தில் சனிக்கிழமை காணப்பட்டது. இது தொடா்பாக வள்ளியூா் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு படையினா் விரைந்து சென்று எறும்பு தின்னியை பிடித்து, திருக்குறுங்குடி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். பின்னா் திருக்குறுங்குடி மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதியில் எறும்பு தின்னி விடப்பட்டது.