செய்திகள் :

தொடர் வெற்றிக்குக் காரணம் கூட்டணி: முதல்வர் ஸ்டாலின்

post image

திமுக தொடர்ந்து வெற்றி பெருவதற்கான காரணங்களில் ஒன்று நம்முடைய கூட்டணி என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரை உத்தங்குடியில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வரும் கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக் குழுக் கூட்டம் இன்று தொடங்கியது. கட்சிக் கொடியை ஏற்றி, முதல்வர் ஸ்டாலின் பொதுக்குழுக் கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, இந்தக் கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

திமுக தொடர்ந்து வெற்றி பெருவதற்கான காரணங்களில் ஒன்று நம்முடைய கூட்டணி. தமிழ்நாடு வரலாற்றிலேயே ஒரு கூட்டணி இத்தனை தேர்தலுக்கு தொடர்ந்ததாக வரலாறே இல்லை

இது வழக்கமான பொதுக்குழு அல்ல... ஏழாவது முறையாக வாகை சூட வியூகம் வகுக்கும் பொதுக்குழு! அடுத்த ஆண்டு இந்த நேரத்தில் என்ன மாதிரி தலைப்புச் செய்தி வந்திருக்க வேண்டும் என்றால், “ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சி அமைத்தது. திமுக கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது!”. “இரண்டாவது முறையாக திராவிட மாடல் ஆட்சி தொடர்கிறது!”. இதுதான் தலைப்புச் செய்தியாக இருக்க வேண்டும்! அதுக்கான வியூகத்தை வகுக்கும் பொதுக்குழுதான் இது! 

உங்களுக்கே தெரியும், நான் மமதையில் பேசுகிறவன் அல்ல. “கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் எதிரிகளே இல்லை” என்று ஆணவக் குரலில் சொல்பவன் அல்ல!  எந்தக் காலத்திலும் எனக்கு ஆணவமோ, மமதையோ வராது. என்னைப் பொறுத்தவரைக்கும், பணிவுதான் தலைமைப் பண்பின் அடையாளம்! சொல்லைவிட செயலே பெரிது! வரலாறு காணாத வெற்றியை நாம் பதிவு செய்வோம் என்று நான் சொல்வது, உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையில்தான்! உங்கள் மேல் மட்டுமல்ல, இந்த பொதுக்குழுவுக்கு வராத, இரவு பகல் பார்க்காமல் - வெய்யில் மழை பார்க்காமல் - தனக்கு என்ன பயன் என்று பார்க்காம உழைக்கும், கோடிக்கணக்கான உடன்பிறப்புகளையும் நம்பித்தான் சொல்கிறேன். திமுக இதுவரைக்கும் அடைந்த வெற்றிகளுக்கெல்லாம் நீங்கள்தான் காரணம்! உடன்பிறப்புகளான நீங்கள் இல்லாமல் திமுகவும் இல்லை; நானும் இல்லை! என்னைத் தலைவராக உருவாக்கியது நீங்கள்! என்னை முதலமைச்சராக்கி உயர்வைத் தந்தது, நீங்களும் – மக்களும்! உலகத்தில் எந்தக் கட்சிக்கும், இப்படிப்பட்ட உறுதிமிக்க உழைப்பாளிகள் தொண்டர்களாக கிடைத்திருக்க மாட்டார்கள்! இப்படிப்பட்ட தொண்டர்கள் காத்து நிற்பதால்தான், 75 ஆண்டுகளைக் கடந்து, நூற்றாண்டை நோக்கி, அதே வேகத்துடன் நடைபோடுகிறோம்! 

சூரியன் நிரந்தரமானது. அதேபோன்று திமுகவும் நிரந்தரமானது. திமுக எப்படி நிரந்தரமானதோ, அதேபோன்று திமுக ஆட்சியும் நிரந்தரமானது என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். அந்த நிலையை உருவாக்க முடியும். உங்களால்தான் முடியும். நம்மால்தான் முடியும். 

தி.மு.க.வுக்கு என்றைக்கும் ஊடக சொகுசு இருந்ததில்லை. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகம் மேல்தான் அதிக விமர்சனங்கள் குவியும். ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு எதிரான அலையைவிட, ஆதரவு அலைதான் அதிகமாக வீசுகிறது. அது வெளியே தெரியாமல் மறைக்க - திசை திருப்ப சிலர் நினைக்கிறார்கள். 

எப்படிப்பட்ட சூழலில் நாம் ஆட்சியில் அமர்ந்தோம் என்று மக்களுக்குத் தெரியும். கடந்த அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி ஆட்சியால், அதல பாதாளத்துக்கு சென்ற தமிழ்நாட்டை மீட்டிருக்கிறோம். மத்திய பா.ஜ.க. அரசு, நம்முடைய உரிமைகளுக்கு எதிராக எத்தனை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அத்தனையையும் எதிர்த்து இன்றுவரை போராடி வருகிறோம். நமக்கு நியாயமாக ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல், தமிழ்நாட்டை பொருளாதார ரீதியாக முடக்க நினைத்தாலும், அந்த நெருக்கடிகள் அனைத்தையும் கடந்து, மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

* பொருளாதாரரீதியான முட்டுக்கட்டைகள், * அரசியல்ரீதியான முட்டுக்கட்டைகள், * ஆளுநர் வழியாக முட்டுக்கட்டைகள், * உரிமைகளை அபகரிக்கும் முட்டுக்கட்டைகள் என்று எத்தனை எத்தனையோ தடைகளை மத்திய பா.ஜ.க. அரசு போட்டாலும், அதை எல்லாம் கடந்து, இன்று இந்தியாவிலேயே வளர்ச்சியில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கிறோம்! 

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள்தான் இருக்கிறது. அதனால், வழக்கத்தைவிட அதிகமாக, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக - திமுக ஆட்சிக்கு எதிரா, அவதூறு அம்புகளை மக்கள் மத்தியில் எதிராளிகள் வீசுவார்கள். கருத்துக் கணிப்பு என்ற பெயரில் மக்கள் மனதில் பொய்யை விதைக்க முயற்சிப்பார்கள். சமூக ஊடகங்கள் மூலமும், விதைப்பார்கள். இதையெல்லாம் முறியடிக்க நாம் தயாராக வேண்டும். அவர்கள் ஒரு நேரேட்டிவ் செட் செய்ய நினைத்தால், நாம் அவர்களைவிட ஒரு படி முன்னால் இருக்க வேண்டும். அவர்களின் பொய்களுக்கு முன்னால், நம்முடைய உண்மை மக்களிடம் சென்று சேர வேண்டும். 

எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் பழனிசாமி என்ன நினைத்தார்? நம்முடைய கூட்டணி பிரிய வேண்டும் என்று நினைத்தார். அதுக்காக, என்னென்ன கதைகளையோ உருவாக்கினார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க.வுடன் பிரிந்த மாதிரி நடித்தால், நம்முடைய கூட்டணி உடையும் என்று நினைத்தார்கள்! ஆனால், அவர்களின் எண்ணம் ஈடேறவில்லை. அதனால்தான், இப்போது தில்லிக்குச் சென்று, பல கார்களில் மாறிமாறி, அமித்ஷாவை சந்தித்து, மீண்டும் பா.ஜ.க.விடம் சரணடைந்துவிட்டார். அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியை அமித்ஷா அறிவித்தபோது ஒரு வார்த்தைகூட பேசாமல், பவ்யமாக பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். என்ன ஒரு அடக்கம்? சசிகலா இவரை முதலமைச்சராக அறிவித்தபோது, எப்படி எல்லாம் ஆக்சன் செய்தாரோ அதே மாதிரி நடிப்பு! என்ன... காலில் மட்டும்தான் விழவில்லை! அது தனியாக செய்தார்களா என்று நமக்கு தெரியவில்லை! 

நாம் கேட்பது... ஒரு மாநிலத்தில், ஒரு கூட்டணிக்கு யார் தலைமை வகிக்கிறார்களோ, அவர்கள்தான் கூட்டணியை அறிவிப்பார்கள்! ஆனால், இங்கு அமித்ஷா அறிவிக்கிறார். இதிலிருந்தே இவர்கள் லட்சணத்தை நாம் புரிந்து கொள்ளலாம்! ஒட்டுமொத்தமாக பா.ஜ.க.வின் கண்ட்ரோலுக்கு சென்றிருக்கிறது அ.தி.மு.க! அடுத்து, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பா.ஜ.க.வின் கண்ட்ரோலுக்கு கொண்டு செல்லத்தான் பழனிசாமி துடிக்கிறார். அதனால்தான் அமித்ஷா இங்கு அடிக்கடி வருகிறார்! நான் ஏற்கனவே சொன்னதுதான், மீண்டும் உறுதியுடன் சொல்கிறேன், எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. டெல்லிக்கு தமிழ்நாடு எப்பவுமே ‘out of control’-தான். இதை மக்களிடம் நாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று பேசினார்.

இதையும் படிக்க: தில்லி மதராஸி குடியிருப்புகள் இடித்து அகற்றம்!

கரோனா: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அவசியமில்லை- அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவுக்கு கரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி மே... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு தீா்ப்பு: முதல்வா், தலைவா்கள் வரவேற்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் வெளியான தீா்ப்புக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவா் திங்க... மேலும் பார்க்க

ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.90,000 அபராதம் விதித்து சென்னை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அதேபோன்று குறைந்... மேலும் பார்க்க

புகைப்பிடிப்பதற்கான வயதை 21- ஆக உயா்த்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: புகைப்பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 21- ஆக உயா்த்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் சிகரெட் மற்... மேலும் பார்க்க

மாநிலங்களவை உறுப்பினா் தோ்தல்: தமிழக, தெலங்கானா ‘தோ்தல் மன்னா்கள்’ வேட்பு மனு

சென்னை: தமிழக மாநிலங்களவை உறுப்பினருக்கான தோ்தலில் போட்டியிட தமிழகம், தெலங்கானாவை சோ்ந்த ‘தோ்தல் மன்னா்கள்’ இருவா் வேட்பு மனு தாக்கல் செய்தனா். தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினா் ப... மேலும் பார்க்க

சுகாதார பிரச்னைகளுக்கு தீா்வு காண பிரத்யேக இணையதள சேவை

சென்னை: சுகாதாரம் சாா்ந்த பிரச்னைகளுக்கு தீா்வு காணவும், புத்தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைக்கவும் பிரத்யேக இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் ப... மேலும் பார்க்க