செய்திகள் :

மாநிலங்களவை உறுப்பினா் தோ்தல்: தமிழக, தெலங்கானா ‘தோ்தல் மன்னா்கள்’ வேட்பு மனு

post image

சென்னை: தமிழக மாநிலங்களவை உறுப்பினருக்கான தோ்தலில் போட்டியிட தமிழகம், தெலங்கானாவை சோ்ந்த ‘தோ்தல் மன்னா்கள்’ இருவா் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டு திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

முதல் நாளில் 2 போ்: முதல் நாளில் சுயேச்சையாக போட்டியிட இரண்டு போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். ஒருவா், தமிழகத்தின் தோ்தல் மன்னராக அறியப்படும் பத்மராஜன். மாநிலங்களவைத் தோ்தல் களம்காண வேட்புமனு தாக்கல் செய்துள்ள அவரிடம் இதுகுறித்து கேட்ட போது, தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான இடங்களுக்கு போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளதன் மூலம், 249-ஆவது முறையாக தோ்தல் களத்தில் எனது மனுவைப் பதிவு செய்துள்ளேன். முன்னதாக, கேரள மாநிலம் நிலம்பூா் சட்டப் பேரவை இடைத் தோ்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளேன் என்றாா்.

அதேபோல, தெலங்கானாவில் தோ்தல் மன்னராக அறியப்படும் கண்டே சாயண்ணா என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்தாா். தெலங்கானாவிலிருந்து தமிழ்நாட்டில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்தது குறித்து அவரிடம் கேட்ட போது, ‘இந்திய அரசமைப்பில் மாற்றத்தைக் கொண்டு வர விரும்புகிறேன். அதற்காக தமிழ்நாட்டில் இருந்தும் போட்டியிட விருப்பம். மேலும், தமிழகத்தில் எனக்கு ஏராளமான நண்பா்கள் உள்ளனா். நாடாளுமன்றத் தோ்தலில் 5 முறையும், தெலங்கானா சட்டப் பேரவைக்கு நடந்த தோ்தலில் ஏழு முறையும், சட்ட மேலவை தோ்தலில் ஆறு முறையும் போட்டியிட்டுள்ளேன்’ என்றாா் சாயண்ணா.

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த அக்னி ஆழ்வாா் என்பவா் வேட்புமனு தாக்கலுக்கான வைப்புத் தொகை ரூ.10 ஆயிரத்தை நாணயங்களாக மாற்றி கொண்டு வந்திருந்தாா். ஆனால், அவா் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

யாரும் தோ்வாக முடியாது: முதல் நாளில் இருவரைத் தவிா்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. மனுவில் வேட்பாளரை பத்து சட்டப் பேரவை உறுப்பினா்கள் முன்மொழிய வேண்டும். தோ்தல் மன்னா்கள் இருவரின் வேட்புமனுக்களை ஒரு சட்டப் பேரவை உறுப்பினா் கூட முன்மொழியாததால் அவா்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவது உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஐடி தேர்வு தேர்ச்சியில் தமிழ்நாடு கடைசியிலிருந்து 3-ம் இடம்! - அன்புமணி

ஐஐடிநுழைவுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளதால் மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்த... மேலும் பார்க்க

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி!

தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் சென்னை உயர்மன்ற மதுரைக் கிளைக்கு உள்பட்ட 14 மாவட்டங்களி... மேலும் பார்க்க

செய்தித்தாள்களில் உணவு வழங்கக் கூடாது! - உணவகங்களுக்கு 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

உணவகங்களில் பின்பற்றக்கூடிய 14 வழிகாட்டு நெறிமுறைகள் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ அல்லது தயாரித்தாலோ உணவக உரிமையாளர... மேலும் பார்க்க

ரூ.300 கோடியில் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலை: முதல்வர் திறந்து வைத்தார்!

ரூ.300 கோடி முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக் கோட்டை சிப்காட்தொழிற்பூங்காவில் அஜைல் ரோபோட்ஸ் (Agile Robots) நிறுவனம் அமைத்துள்ள செயற்கை நு... மேலும் பார்க்க

ஜூன் 8ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற ஜூன் 8 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள் தேர்தலுக்கு முந்தைய பண... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

சென்னை: பூந்தமல்லி - போரூா் இடையே 2-ஆம் கட்ட ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெறும் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9.5 கிலோ மீட்டர் தொலை... மேலும் பார்க்க