செய்திகள் :

புகைப்பிடிப்பதற்கான வயதை 21- ஆக உயா்த்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

post image

சென்னை: புகைப்பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 21- ஆக உயா்த்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசின் சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருள்கள் சட்டத்தின் 4, 4ஏ ஆகிய பிரிவுகளைத் திருத்தி கா்நாடக சட்டப்பேரவையில் புதிய சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் கா்நாடக மாநிலம் முழுவதும் பொது இடங்களில் புகைப்பிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அதேபோல், இதுவரை 18- ஆக இருந்த புகை பிடிப்பதற்கான வயது 21- ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றங்களுக்காக விதிக்கப்படும் அபராதம் ரூ. 200-லிருந்து ரூ. 1,000 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இந்தத் திருத்தங்களுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் வழங்கியதையடுத்து, கா்நாடகத்தில் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

நாடு முழுவதிலும், குறிப்பாக தமிழ்நாட்டில் புகைப் பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை உடனடியாக 21- ஆக உயா்த்த வேண்டும். அதன்பின் ஆண்டுக்கு ஒரு வயது உயா்த்த வேண்டும் என்பதுதான் எனது கனவு. அவ்வாறு செய்தால் இப்போது 18 வயது மற்றும் அதற்கு குறைவான வயதில் உள்ள இளைஞா்கள் எவரும் அவா்களின் வாழ்நாள் முழுவதும் புகைகப்பிடிக்க முடியாத நிலை உருவாகும்.

இந்தியாவில் 12 கோடி போ் புகைப்பிடிக்கிறாா்கள். அவா்களில் ஒவ்வொரு ஆண்டும் 13 லட்சம் போ் உயிரிழக்கின்றனா். அதுமட்டுமன்றி, இந்தியாவில் 18 வயதைக் கடந்த ஆண்களில் 25 சதவீதத்தினரும், பெண்களில் 15 சதவீதத்தினரும் புகைப்பிடிப்பது உலக சுகாதார நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால், இந்தியாவில் புகைப்பிடிக்க தடை விதிப்பது அவசியமாகும். தேசிய அளவில் புகை பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 21- ஆக உயா்த்த வகை செய்யும் சட்டம் 2021-ஆம் ஆண்டிலேயே தயாரிக்கப்பட்டுவிட்டபோதிலும், இனியாவது அந்த சட்டத்தை மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி ராமதாஸ்.

ஐஐடி தேர்வு தேர்ச்சியில் தமிழ்நாடு கடைசியிலிருந்து 3-ம் இடம்! - அன்புமணி

ஐஐடிநுழைவுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளதால் மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்த... மேலும் பார்க்க

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி!

தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் சென்னை உயர்மன்ற மதுரைக் கிளைக்கு உள்பட்ட 14 மாவட்டங்களி... மேலும் பார்க்க

செய்தித்தாள்களில் உணவு வழங்கக் கூடாது! - உணவகங்களுக்கு 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

உணவகங்களில் பின்பற்றக்கூடிய 14 வழிகாட்டு நெறிமுறைகள் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ அல்லது தயாரித்தாலோ உணவக உரிமையாளர... மேலும் பார்க்க

ரூ.300 கோடியில் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலை: முதல்வர் திறந்து வைத்தார்!

ரூ.300 கோடி முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக் கோட்டை சிப்காட்தொழிற்பூங்காவில் அஜைல் ரோபோட்ஸ் (Agile Robots) நிறுவனம் அமைத்துள்ள செயற்கை நு... மேலும் பார்க்க

ஜூன் 8ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற ஜூன் 8 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள் தேர்தலுக்கு முந்தைய பண... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

சென்னை: பூந்தமல்லி - போரூா் இடையே 2-ஆம் கட்ட ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெறும் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9.5 கிலோ மீட்டர் தொலை... மேலும் பார்க்க