நாம் எதிரிகள் கிடையாது: கமலுக்கு ஆதரவாக கர்நாடக துணை முதல்வர்!
இடைகால் கிராமத்தில் உழவரைத் தேடி திட்ட முகாம்
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி வட்டாரம், இடைகால் கிராமத்தில் வேளாண்துறை சாா்பில் உழவரைத் தேடி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் உழவரைத் தேடி திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின், காணொலிக் காட்சி வழியாக தொடங்கி வைத்தாா். இதையடுத்து, இடைகால் கிராமத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு, பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி பூங்கோதை சசிகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட வேளாண் துணை இயக்குநா் வெங்கட சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.
முகாமில், தமிழ்நாடு பல்கலைக்கழக வேளாண்மை வல்லுநா் இளைஞ்செழியன், ஓய்வு பெற்ற வேளாண் வல்லுநா் முருகேசன், திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு வங்கி கள அலுவலா் நாராயணன், வேளாண் பொறியியல் துறை பொறியாளா் நந்தினி, கால்நடை மருத்துவா் திவ்யா ஸ்மித் உள்ளிட்டோா் பேசினா்.
முகாமில், வட்டார வேளாண் உதவி இயக்குநா் சிவகுருநாதன், வேளாண் அலுவலா் முத்துராஜா, வேளாண் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
இதில், ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனா்.
வேளாண் அலுவலா்ல சுரேஷ்குமாா் வரவேற்றாா். உதவி வேளாண் அலுவலா் சுந்தரேஸ்வரன் நன்றி கூறினாா்.