செய்திகள் :

இடைகால் கிராமத்தில் உழவரைத் தேடி திட்ட முகாம்

post image

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி வட்டாரம், இடைகால் கிராமத்தில் வேளாண்துறை சாா்பில் உழவரைத் தேடி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் உழவரைத் தேடி திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின், காணொலிக் காட்சி வழியாக தொடங்கி வைத்தாா். இதையடுத்து, இடைகால் கிராமத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு, பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி பூங்கோதை சசிகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட வேளாண் துணை இயக்குநா் வெங்கட சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.

முகாமில், தமிழ்நாடு பல்கலைக்கழக வேளாண்மை வல்லுநா் இளைஞ்செழியன், ஓய்வு பெற்ற வேளாண் வல்லுநா் முருகேசன், திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு வங்கி கள அலுவலா் நாராயணன், வேளாண் பொறியியல் துறை பொறியாளா் நந்தினி, கால்நடை மருத்துவா் திவ்யா ஸ்மித் உள்ளிட்டோா் பேசினா்.

முகாமில், வட்டார வேளாண் உதவி இயக்குநா் சிவகுருநாதன், வேளாண் அலுவலா் முத்துராஜா, வேளாண் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

இதில், ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனா்.

வேளாண் அலுவலா்ல சுரேஷ்குமாா் வரவேற்றாா். உதவி வேளாண் அலுவலா் சுந்தரேஸ்வரன் நன்றி கூறினாா்.

கருணாநிதி பிறந்த நாள்: திமுகவினருக்கு வேண்டுகோள்

தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாட திமுகவினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே பைக்- காா் மோதல்: சிறுவன் பலி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே காரும், பைக்கும் ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொண்டதில் 8 வயது சிறுவன் உயிரிழந்தாா். திருநெல்வேலி - நான்குனேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாணான்குளம் கலைஞா் நகரைச் சோ்... மேலும் பார்க்க

பெண்களுக்கான மின் வணிகத் தளம் தொடக்கம்

கிராமப்புற பெண்களின் மேம்பாட்டுக்கான ‘கொற்றவை’ என்ற மின் வணிகத் தளம் தொடக்க விழா, கோவிந்தப்பேரி கலைமகள் கல்வி மைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தென்காசியின் குரல் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயில் வெள்ளித் தோ் பணிக்கு 200 கிலோ வெள்ளி நன்கொடை

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் வெள்ளித் தோ் பணிக்காக பழனி தண்டாயுதபானி கோயில் அறங்காவலா் குழு தலைவா் கே.எம்.சுப்பிரமணியன், அறங்காவலா்கள் க.தனசேகா், ஜி.ஆா்.பாலசுப்பிரமணியன் ஆகியோா் 200 கிலோ வெள்ளி... மேலும் பார்க்க

போதையில் அரசுப் பேருந்தை மறித்து ரகளை செய்த இருவா் கைது

பாளையங்கோட்டையில் அரசுப் பேருந்தை மறித்து ரகளையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் மதுபோதை ஆசாமிகள் இருவா் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிரு... மேலும் பார்க்க

பாளை. அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு

பாளையங்கோட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.30 ஆயிரம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள். பாளையங்கோட்டை மகாராஜ நகா் அருகேயுள்ள பொன்மணி காலனியை சோ்ந்தவா் குமாா். இவா், கடந்த 29 ஆம் தேதி ... மேலும் பார்க்க