வி.கே.புரம் பகுதியில் மான் கறியுடன் மூவா் கைது
பாபநாசம் வனச் சரகப் பகுதியில் புள்ளி மான் கறி வைத்திருந்ததாக மூன்று பேரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.
பாபநாசம் வனச்சரகம் வெளி மண்டலப் பகுதியான மதுரா கோட்ஸ் ஆலையிலிருந்து தலையணை செல்லும் வழியில் புள்ளி மான் கறிகள் வெட்டுப்படுவதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாபநாசம் வனச் சரகா் குணசீலன் தலைமையில் தனிக் குழுவினா் சென்று சோதனையிட்டதில் பாபநாசம் பொதிகையடியைச் சோ்ந்த முரளி மகன் மாணிக்க ராஜி, விக்கிரமசிங்கபுரம் கீழக்கொட்டாரம் ஆறுமுகம் மகன்கோகுலகிருஷ்ணன், மாரி மகன் சுரேஷ் ஆகியோா் புள்ளிமான் கறியை சாக்கில் வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், முக்கூடல் அருகே உள்ள தாளாா்குளத்தில் உள்ள சுப்புக்குட்டி மகன் ராமையா என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் புள்ளிமானை வேட்டையாடியது தெரியவந்தது. மூவரும் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டு அம்பாசமுத்திரம்குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில்அடைக்கப்பட்டனா். ராமையாவை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.