செய்திகள் :

தூத்துக்குடி: நிலத்தைக் கேட்டு பெண்ணிற்குக் கொலை மிரட்டல்; திமுக எம்எல்ஏ-வின் சகோதரர் கைது

post image

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ., சண்முகையா. இவரது உடன்பிறந்த சகோதரர் அயிரவன்பட்டி முருகேசன். 

தொழிலதிபரான இவர் முன்னாள் அ.தி.மு.க பிரமுகர். முருகேசன் ஓட்டப்பிடாரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தனியார் காற்றாலைகளுக்கு இடம் பிடித்துக் கொடுப்பது மற்றும் பல்வேறு தொழில்களைச் செய்து வருகிறார்.

இந்நிலையில், தூத்துக்குடி எட்டயபுரம் அருகேயுள்ள தாப்பாத்தி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவியான முத்துமாடத்தி என்பவருக்கு ஓட்டப்பிடாரம் தாலுகா பகுதியில் 4.5 ஏக்கர் நிலம் உள்ளது.

அந்த நிலத்தை முருகேசன், மாடத்தி மற்றும் அவரது கணவர் மாரிமுத்துவிடம் தன்னிடம் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அயிரவன்பட்டி முருகேசன்

இதற்கு முத்துமாடத்தி மற்றும் அவரது கணவர் மாரிமுத்து ஆகியோர் மறுத்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 29-ம் தேதி மாடத்தி மற்றும் அவரது கணவர் மாரிமுத்து ஆகியோர் திருச்செந்தூர் கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதி கெட்டான் ஓடை பகுதி அருகே வந்து கொண்டிருக்கும் போது காரில் வந்த அயிரவன்பட்டி முருகேசன், ”இடத்தைக் கேட்டால் தர மறுப்பாயா? உன்னை என்னைச் செய்கிறேன் பார்” எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக முத்துமாடத்தி, முருகேசன் மீது முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து முத்தையாபுரம் போலீஸார் முருகேசன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.  

இந்த கைது நடவடிக்கை தி.மு.க மேலிடத்தின் உத்தரவுப்படியே நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஓட்டப்பிடாரம் பகுதி தி.மு.கவினரிடம் பேசினோம், “ஓட்டப்பிடாரத்தைப் பொறுத்தவரையில் எம்.எல்.ஏ சண்முகையா ஒரு அணியாகவும், ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளரான  இளையராஜா ஒரு அணியாகவும் செயல்படுகிறார்கள்.

கைது செய்யப்பட்ட முருகேசன்

கொலை மிரட்டல் புகாரளித்த முத்து மாடத்தி இளையராஜாவின் அத்தை ஆவார். இளையராஜாவின் மாமாவான மாரிமுத்து பெயரிலிருக்கும் இளையராஜாவின் சிலோன்காலனி  நிலத்தை அமோசா சோலார் நிறுவனத்துக்காக ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதாக ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் கடந்த மார்ச்சில் புகார் கொடுக்கப்பட்டு எப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்பட்டது.  

முருகேசன், இளையராஜா இருவருமே ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்கிறார்கள். இதில் பல முறை இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் தம்பி சண்முகையாவின் பெயரைச் சொல்லி தொழிலதிபர்களிடம் பண வசூல், கல்குவாரிகளில் பண வசூல், சட்டவிரோதமாக செம்மரங்களை வெட்டியது, சோலார் நிறுவனத்திற்காக விவசாய நிலங்கள் அபகரிப்பு எனப் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும் உள்ளன.

அமைச்சர் கே.என்.நேருவுடன் முருகேசன்
அமைச்சர் கே.என்.நேருவுடன் முருகேசன்

முருகேசனின் அட்ராசிட்டியால் முதல்வர் ஸ்டாலினால் பலமுறை சண்முகையா எச்சரிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் முப்பிலிவெட்டியைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகி விக்னேஷ் உட்பட 4 பேர் சிலைகடத்தல் முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் சண்முகையா மற்றும் முருகேசனின் பெயரும் அடிபட்டது.” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

நெல்லை: கணவரின் நடத்தையில் சந்தேகம்; கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது!

நெல்லை அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். ஆட்டோ டிரைவரான இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். கணவன், மனைவியிடையே கடந்த சில நாட்க... மேலும் பார்க்க

கீரை கட்டு மோசடி; போலி சான்றிதழ் தயாரிப்பு - ஓய்வு பெறும் நாளில் சுகாதார அலுவலர் சஸ்பெண்டு

தென்காசி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வழங்க கீரை உள்ளிட்ட காய்கறிகள் ஒப்பந்தக்காரர்களால் பெறப்பட்டது. கடந்த 2022 – 2023-ம் ஆண்டு காலகட்டத்தில் 30 ரூபாய்க்குள் வாங்க வேண்டிய ஒரு கிலோ கீரையை,... மேலும் பார்க்க

பல் சிகிச்சை எடுத்துகொண்ட 8 பேர் மரணம்... சர்ச்சையில் வாணியம்பாடி கிளினிக் - நடந்தது என்ன?

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பி.ஜே.என்.நேரு சாலையில், `வி.டி.எஸ் - அறிவு பல் மருத்துவமனை’ என்கிற பெயரில், தனியார் கிளினிக் செயல்பட்டுவந்தது. இங்கு வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சேர்ந்த இந்திர... மேலும் பார்க்க

20 ஆண்டுகளில் பாலியல் கொடுமைக்கு இரையான 299 பேர்... பிரான்ஸை அதிரவைத்த ஓய்வுபெற்ற மருத்துவர்!

கடந்த 20 வருடங்களில் சிறுமிகள், பெண்கள் என 299 பேரை பாலியல் வன்கொடுமை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் ஓய்வுபெற்ற மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ராய... மேலும் பார்க்க

மண்ணில் புதைக்கப்பட்ட ஏலக்காய் மூடைகள்; இலங்கைக்கு கடத்த முயன்ற தந்தை - மகனுக்கு போலீஸ் வலை!

கடந்த சில ஆண்டுகளாக தமிழக கடலோர பகுதிகளில் இருந்து போதைப்பொருள்கள், கஞ்சா, கடல் அட்டை போன்றவை இலங்கைக்கு கள்ளத்தனமாக கடத்தப்பட்டு வருகின்றன. இவற்றுடன் தற்போது சமையலுக்குப் பயன்படுத்தும் விராலி மஞ்சள்,... மேலும் பார்க்க

`தொழிலதிபரிடம் லஞ்சம்' - அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்த சிபிஐ; சிக்கியது எப்படி?

ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் அமலாக்கத் துறையின் இணை இயக்குநர் சிந்தன் ரகுவம்சி. இவர் தொழிலதிபர் ஒருவரிடம் லஞ்சம் வாங்க முயன்றபோது சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக வெளியான செய்தியில், சுரங்... மேலும் பார்க்க