செய்திகள் :

`தொழிலதிபரிடம் லஞ்சம்' - அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்த சிபிஐ; சிக்கியது எப்படி?

post image

ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் அமலாக்கத் துறையின் இணை இயக்குநர் சிந்தன் ரகுவம்சி. இவர் தொழிலதிபர் ஒருவரிடம் லஞ்சம் வாங்க முயன்றபோது சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக வெளியான செய்தியில், சுரங்க நிறுவனர் ஒருவருக்கு எதிராக இருக்கும் நிதி முறைகேடுகள் தொடர்பான வழக்கில் நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க, அந்த தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டார் அமலாக்கத் துறையின் இணை இயக்குநர் சிந்தன் ரகுவம்சி.

லஞ்சம் கொடுத்தால் மேலும் சில சலுகைகளை வழங்குவதாக அவரிடம் தெரிவித்துள்ளார்.

லஞ்சம்

அந்த தொழிலதிபர் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லை எனத் தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து சிந்தன் ரகுவம்சி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. எனவே, தொழிலதிபர் சிபிஐ-யிடம் புகார் கொடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் பொறிவைத்து சிந்தன் ரகுவம்சியை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரி சிந்தன் ரகுவம்சியை புவனேஸ்வரில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

சிந்தன் ரகுவம்சி குறைந்தது ஒன்பது தொழிலதிபர்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டு குறித்து சிபிஐ எந்த அதிகாரப்பூர்வ செய்தியும் வெளியிடவில்லை.

"குழந்தைகள் உடலில் சாத்தான்" - மகன்களை ஸ்கிப்பிங் கயிற்றால் அடித்த பாஸ்டர் தந்தை கைது; நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கிங்ஸ்லி(42).இவர் அந்தப் பகுதியில் உள்ள ரசல்ராஜ் அடுக்குமாடிக்குடியிருப்பு ஒன்றில் தனது மனைவி சஜினி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாடகைக்குக் குடியிர... மேலும் பார்க்க

நெல்லை: கணவரின் நடத்தையில் சந்தேகம்; கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது!

நெல்லை அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். ஆட்டோ டிரைவரான இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். கணவன், மனைவியிடையே கடந்த சில நாட்க... மேலும் பார்க்க

கீரை கட்டு மோசடி; போலி சான்றிதழ் தயாரிப்பு - ஓய்வு பெறும் நாளில் சுகாதார அலுவலர் சஸ்பெண்டு

தென்காசி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வழங்க கீரை உள்ளிட்ட காய்கறிகள் ஒப்பந்தக்காரர்களால் பெறப்பட்டது. கடந்த 2022 – 2023-ம் ஆண்டு காலகட்டத்தில் 30 ரூபாய்க்குள் வாங்க வேண்டிய ஒரு கிலோ கீரையை,... மேலும் பார்க்க

பல் சிகிச்சை எடுத்துகொண்ட 8 பேர் மரணம்... சர்ச்சையில் வாணியம்பாடி கிளினிக் - நடந்தது என்ன?

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பி.ஜே.என்.நேரு சாலையில், `வி.டி.எஸ் - அறிவு பல் மருத்துவமனை’ என்கிற பெயரில், தனியார் கிளினிக் செயல்பட்டுவந்தது. இங்கு வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சேர்ந்த இந்திர... மேலும் பார்க்க

20 ஆண்டுகளில் பாலியல் கொடுமைக்கு இரையான 299 பேர்... பிரான்ஸை அதிரவைத்த ஓய்வுபெற்ற மருத்துவர்!

கடந்த 20 வருடங்களில் சிறுமிகள், பெண்கள் என 299 பேரை பாலியல் வன்கொடுமை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் ஓய்வுபெற்ற மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ராய... மேலும் பார்க்க

மண்ணில் புதைக்கப்பட்ட ஏலக்காய் மூடைகள்; இலங்கைக்கு கடத்த முயன்ற தந்தை - மகனுக்கு போலீஸ் வலை!

கடந்த சில ஆண்டுகளாக தமிழக கடலோர பகுதிகளில் இருந்து போதைப்பொருள்கள், கஞ்சா, கடல் அட்டை போன்றவை இலங்கைக்கு கள்ளத்தனமாக கடத்தப்பட்டு வருகின்றன. இவற்றுடன் தற்போது சமையலுக்குப் பயன்படுத்தும் விராலி மஞ்சள்,... மேலும் பார்க்க