செய்திகள் :

பாமக அலுவலக முகவரியை மாற்றிய அன்புமணி

post image

சென்னை: பாமக அலுவலக முகவரியை கட்சித் தலைவர் அன்புமணி மாற்றியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, பாமகவில், கட்சி நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு வெடித்து விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், அன்புமணி வெளியிட்ட புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் பாமக அலுவலகத்தின் முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, சென்னை, தி.நகரில் உள்ள தனது வீட்டின் முகவரியை கட்சி அலுவலக முகவரியாக அன்புமணி மாற்றியுள்ளார் என்று தெரிகிறது.

சோழிங்கநல்லூரில் இன்று இரண்டாவது நாளாக பாமக மாவட்டச் செயலளர்கள் உள்ளிட்டோருடன் அன்புமணி பேசி வருகிறார்.

அதில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வழிகாட்டி. நானே தலைவர். கட்சி யார் சொத்தும் கிடையாது. பொதுக்குழு தேர்ந்தெடுத்த, தேர்தல் ஆணையம் அங்கீகரித்த தலைவர் நான்தான் என்று அன்புமணி திட்டவட்டமாகப் பேசி வருகிறார்.

நேற்றும், மாவட்டச் செயலர்கள் உள்ளிட்டோர் மத்தியில் பேசிய அன்புமணி, கட்சியின் தலைவர் நானே என்றும், பாமக பொறுப்பாளர்கள் நியமனத்துக்கு தான் அளிக்கும் கடிதமே செல்லும் என்றும், கட்சியின் பொதுக்குழு தனக்கு ஆதரவாகவே இருப்பதையும் சுட்டிக்காட்டிப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை க... மேலும் பார்க்க

தேமுதிகவுடன் சுமூக உறவு உள்ளது- எடப்பாடி பழனிசாமி

தேமுதிகவுடன் சுமூக உறவு உள்ளது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், மதுரையில் கால்வாயை திரைச்சீ... மேலும் பார்க்க

அஞ்சலை அம்மாள் சிலைக்கு விஜய் மரியாதை

சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அஞ்சலை அம்மாள் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதுகுறித்து விஜய் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், இந்த மண்ணை நேசித்து, இந்த மண்ணின்... மேலும் பார்க்க

தொடர் வெற்றிக்குக் காரணம் கூட்டணி: முதல்வர் ஸ்டாலின்

திமுக தொடர்ந்து வெற்றி பெருவதற்கான காரணங்களில் ஒன்று நம்முடைய கூட்டணி என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மதுரை உத்தங்குடியில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வரும் கட்சியின் ... மேலும் பார்க்க

தில்லி மதராஸி குடியிருப்பு இடிப்பு: தமிழகம் திரும்புவதற்கு அரசு நடவடிக்கை!

தில்லி நிஜாமுதீன் மதராஸி முகாமில் தமிழர்களின் குடியிருப்புகள் இன்று(ஜூன் 1) முழுவதும் இடித்து அகற்றப்பட்ட நிலையில், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தாமதமின்றி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவ... மேலும் பார்க்க

புதிய உறுப்பினர் சேர்க்கை: திமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம்!

உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக திமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரை உத்தங்குடியில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வரும் கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ப... மேலும் பார்க்க