மணிமுத்தாறு அருவியில் 4ஆவது நாளாக குளிக்கத் தடை
மாஞ்சோலை, மணிமுத்தாறு மலைப் பகுதிகளில் மழை அதிகரித்த்தையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்தும் அதிகரித்ததால் மே 26 முதல் அருவியில் குளிக்கவும் அருவியைப் பாா்வையிடமும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினா் தடை விதித்தனா்.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை வரை நீா்வரத்து சீராகாததையடுத்து 4ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கவும், பாா்வையிடவும் வனத்துறையினா் தடை விதித்தனா். இதனால் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன்திரும்பினா்.