செய்திகள் :

US Tariffs: `இறக்குமதி வரி ரத்து-க்கு தற்காலிக தடை!' - நீதிமன்ற தீர்ப்பு ட்ரம்ப்-க்கு வெற்றியா?

post image

கடந்த ஏப்ரல் 2-ம் தேதி, பெரும்பாலான உலக நாடுகளுக்கு 'பரஸ்பர வரி'யை விதித்து உத்தரவிட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்த நாளுக்கு 'விடுதலை நாள்' என்றும் பெயர் வைத்தார்.

'பிற உலக நாடுகள் அமெரிக்காவின் மீது அதிக வரிகளை விதிக்கின்றன. அமெரிக்காவின் நிதிப் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும்.' என்று இதற்கு ஏகப்பட்ட காரணங்களை ட்ரம்ப் அடுக்கினார்.

அமெரிக்காவில் உள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றம்
அமெரிக்காவில் உள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றம்

இந்த வரி விதிப்பை ட்ரம்ப் அரசு 'அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் தான் உத்தரவிட்டது.

கடந்த ஏப்ரல் 9-ம் தேதி முதல் அடுத்த 90 நள்களுக்கு இந்தப் பரஸ்பர வரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வரி உடன் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு பொருள்களுக்கும் கூடுதலாக 10 சதவிகித வரி விதிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டது. இது தற்போது நடைமுறையில் தான் உள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு

ஆக, இந்த வரி விதிப்புகள் பிற நாடுகளை மட்டுமல்லாமல், அமெரிக்கவையும் பாதிக்கும் என்று நியூயார்க்கில் உள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'இறக்குமதி வரி விதிப்பை ட்ரம்ப் மட்டுமே முடிவு செய்ய முடியாது. காங்கிரஸ் தான் முடிவு செய்ய வேண்டும்' என்று நேற்று முன்தினம் (ஏப்ரல் 28) உத்தரவிட்டது. மேலும், இறக்குமதி வரி விதிப்பை ரத்து செய்து உத்தரவிடப்பட்டது. இந்தத் தீர்ப்பிற்கு ட்ரம்ப் அரசாங்கம் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தது.

ட்ரம்ப்

தீர்ப்பு தற்காலிக நிறுத்தம்!

இதனையடுத்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம், 'இந்த வழக்கு விசாரணை முடியும் வரை, இறக்குமதி வரி விதிப்பிற்கு விதிக்கப்பட்ட ரத்து நிறுத்தப்படுகிறது' என்று கூறியுள்ளது.

இது தற்காலிக நிறுத்தம் தானே தவிர, நிரந்தரமானது அல்ல. இந்த வழக்கின் விசாரணை முடிந்து இறுதித் தீர்ப்பு வரும்போது தான் ட்ரம்பி-க்கு வெற்றியா என்பது தெரியவரும்.

Doctor Vikatan: மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! தடுப்பூசி, லாக்டௌன் தேவையா?

Doctor Vikatan: ஒரு வழியாக நம்மைவிட்டுப் போய்விட்டது என நினைக்கவைத்தகொரோனா, மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது. ஒரே நேரத்தில் நான்கு வேரியன்ட்டுகள் பரவுவதாகவெல்லாம்சொல்கிறார்கள். மக்கள் மாஸ்க் அணிவதையே... மேலும் பார்க்க

``குடும்ப அரசியல் என்று எதிர்த்தீர்களே? இப்போது..'' - செய்தியாளர் கேள்விக்கு கமலின் ரியாக்ஷன் என்ன?

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கமல்ஹாசன் தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசியிருக்கிறார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கமல்ஹாசன், "முதல்வரை சந்தித்து நன்றி... மேலும் பார்க்க

``பாகிஸ்தானின் 81% ராணுவ தளவாடங்கள் சீனா உடையது தான்!'' - சசி தரூர் குற்றச்சாட்டு

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க, இந்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்களை அமைத்துள்ளது. அந்தக் குழுக்கள் இப்போது வெளிநாட்டில் பயணம் மேற்கொண்டு வருகின்றன. அதில் நேற்று சசி தரூர் கொலம்பியாவிற்க... மேலும் பார்க்க

`கீழடி ஆய்வறிக்கையை திருப்பி அனுப்பிய இந்திய தொல்லியல் துறை' - கிளம்பிய சர்ச்சையும், விளக்கமும்!

அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடி குறித்த தனது ஆய்வறிக்கையை இந்திய தொல்லியல் துறைக்கு 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் சமர்ப்பித்திருந்தார். இந்த அறிக்கையில் சில மாற்றங்களைச் செய்யுமாறு கடந்த வாரம் திருப்பி அனுப்ப... மேலும் பார்க்க

USA: `சீன மாணவர்களுக்கு ஸ்பெஷல் கண்டிஷன்' - வெளிநாட்டு மாணவர்களுக்கு ட்ரம்ப் வைக்கும் செக்!

அமெரிக்காவில் படிப்பு... அமெரிக்காவில் வேலை என்பது இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான உலக நாடுகளில் உள்ள இளைஞர்களின் கனவு. ஆனால், இனி அது அவ்வளவு எளிதாக இருக்காது. இதற்கு காரணம், 'அமெரிக்க அதிபர் ட்ரம்ப்'.அ... மேலும் பார்க்க

`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா பரபரப்பு புகார்!

தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சிக்குள் சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ந்து சலசலப்பு எழுந்து கொண்டே இருக்கிறது. கடந்த வாரம், 'நான் என்னுடைய தந்தைக்கு எழுதிய கடிதம... மேலும் பார்க்க