செய்திகள் :

`கீழடி ஆய்வறிக்கையை திருப்பி அனுப்பிய இந்திய தொல்லியல் துறை' - கிளம்பிய சர்ச்சையும், விளக்கமும்!

post image

அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடி குறித்த தனது ஆய்வறிக்கையை இந்திய தொல்லியல் துறைக்கு 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் சமர்ப்பித்திருந்தார். இந்த அறிக்கையில் சில மாற்றங்களைச் செய்யுமாறு கடந்த வாரம் திருப்பி அனுப்பியது தொல்லியல் துறை. இது தமிழ்நாட்டில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்திய தொல்லியல் துறையின் விளக்கம்

இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை தற்போது விளக்கமளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,

"கீழடி அகழ்வாய்வு ஆய்வறிக்கை சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள செய்திகள் குறித்த இந்திய தொல்லியல் துறையின் தெளிவுரை இது.

கீழடி
கீழடி

இந்திய தொல்லியல் துறை அகழ்வாய்வு அறிக்கையைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதில் ஏகப்பட்ட முயற்சிகள் மற்றும் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதால், ஆய்வறிக்கைகள் மிகக் கவனமாக வெளியிடப்படுகிறது.

கீழடி ஆய்வறிக்கையை வெளியிடுவதில் இந்திய தொல்லியல் துறைக்கு விருப்பமில்லை என்கிற செய்தி சமீப காலமாகப் பரவி வருகிறது. இதை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம்.

கீழடி ஆய்வறிக்கை உள்ளிட்ட இந்திய தொல்லியல் துறை வெளியிடும் ஒவ்வொரு ஆய்வறிக்கையும், வெளியாவதற்கு முன்பு நிபுணர்களால் ஆய்வு செய்யப்படும். அப்படி ஆய்வு செய்யப்படும்போது, எதாவது மாற்றம் இருந்தால், அதை மாற்றச் சொல்வது இயல்பு தான். இதை செய்தி நிறுவனங்கள் புரிந்துகொள்ள வேண்டும்".

அமர்நாத் ராமகிருஷ்ணனின் ஆய்வறிக்கை

அமர்நாத் ராமகிருஷ்ணன் 2014-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு வரை தான் கீழடியில் செய்த ஆய்வை அறிக்கையாக 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் சமர்பித்தார். அது 982 பக்க ஆய்வறிக்கை ஆகும்.

அதில் சில மாற்றங்களை செய்து மீண்டும் சமர்பிக்கும் படி, கடந்த வாரம் இந்திய தொல்லியல் துறை உத்தரவிட்டது.

ஆய்வறிக்கையில் என்ன பிரச்னை?

தனது ஆய்வறிக்கையில் அமர்நாத் ராமகிருஷ்ணன் குறிப்பிடப்பட்டுள்ள காலங்களுக்கு சரியான பெயர் தர வேண்டும் என்றும், அவர் குறிப்பிட்டுள்ள எட்டாம் நூற்றாண்டு BCE முதல் ஐந்தாம் நுற்றாண்டின் BCE வரை சரியான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கீழடி
கீழடி

அமர்நாத் ராமகிருஷ்ணனின் பதில் என்ன?

இந்திய தொல்லியல் துறை கூறிய மாற்றத்தை மறுத்து, அமர்நாத் ராமகிருஷ்ணன் கடந்த மே 23-ம் தேதி பதில் அளித்திருந்தார். தனது ஆய்வறிக்கையில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. தான் குறிப்பிட்டுள்ள காலங்கள் அனைத்துமே இந்திய தொல்லியல் துறையால் ஒத்துக்கொள்ளப்பட்டவை தான் என்பதே அந்தப் பதில்.

Doctor Vikatan: மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! தடுப்பூசி, லாக்டௌன் தேவையா?

Doctor Vikatan: ஒரு வழியாக நம்மைவிட்டுப் போய்விட்டது என நினைக்கவைத்தகொரோனா, மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது. ஒரே நேரத்தில் நான்கு வேரியன்ட்டுகள் பரவுவதாகவெல்லாம்சொல்கிறார்கள். மக்கள் மாஸ்க் அணிவதையே... மேலும் பார்க்க

``குடும்ப அரசியல் என்று எதிர்த்தீர்களே? இப்போது..'' - செய்தியாளர் கேள்விக்கு கமலின் ரியாக்ஷன் என்ன?

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கமல்ஹாசன் தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசியிருக்கிறார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கமல்ஹாசன், "முதல்வரை சந்தித்து நன்றி... மேலும் பார்க்க

``பாகிஸ்தானின் 81% ராணுவ தளவாடங்கள் சீனா உடையது தான்!'' - சசி தரூர் குற்றச்சாட்டு

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க, இந்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்களை அமைத்துள்ளது. அந்தக் குழுக்கள் இப்போது வெளிநாட்டில் பயணம் மேற்கொண்டு வருகின்றன. அதில் நேற்று சசி தரூர் கொலம்பியாவிற்க... மேலும் பார்க்க

US Tariffs: `இறக்குமதி வரி ரத்து-க்கு தற்காலிக தடை!' - நீதிமன்ற தீர்ப்பு ட்ரம்ப்-க்கு வெற்றியா?

கடந்த ஏப்ரல் 2-ம் தேதி, பெரும்பாலான உலக நாடுகளுக்கு 'பரஸ்பர வரி'யை விதித்து உத்தரவிட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்த நாளுக்கு 'விடுதலை நாள்' என்றும் பெயர் வைத்தார். 'பிற உலக நாடுகள் அமெரிக்காவின் ம... மேலும் பார்க்க

USA: `சீன மாணவர்களுக்கு ஸ்பெஷல் கண்டிஷன்' - வெளிநாட்டு மாணவர்களுக்கு ட்ரம்ப் வைக்கும் செக்!

அமெரிக்காவில் படிப்பு... அமெரிக்காவில் வேலை என்பது இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான உலக நாடுகளில் உள்ள இளைஞர்களின் கனவு. ஆனால், இனி அது அவ்வளவு எளிதாக இருக்காது. இதற்கு காரணம், 'அமெரிக்க அதிபர் ட்ரம்ப்'.அ... மேலும் பார்க்க

`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா பரபரப்பு புகார்!

தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சிக்குள் சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ந்து சலசலப்பு எழுந்து கொண்டே இருக்கிறது. கடந்த வாரம், 'நான் என்னுடைய தந்தைக்கு எழுதிய கடிதம... மேலும் பார்க்க