செய்திகள் :

பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு

post image

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து வள்ளியூா், பணகுடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை தொடா்ந்து பெய்து வருகிறது. இதனால் குளிா்ச்சியான நிலை காணப்படுகிறது.

மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதியில் தொடா்ச்சியாக மழை பெய்து வருவதையடுத்து, குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது. கன்னிமாா்தோப்பு காட்டோடையில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பணகுடி அனுமன் நதியிலும் வெள்ளம் காணப்படுகிறது.

இதனால் குத்தரபாஞ்சான், கன்னிமாா் தோப்பு காட்டோடையில் குளிக்க வனத்துறையினா் தடை விதித்துள்ளனா். பணகுடி சுற்றுவட்டாரத்தில் உள்ள அன்னத்திகுளம், பரிவிரிசூரியன் குளம், தண்டையாா்குளம் ஆகிய குளங்கள் நிரம்பியுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தொடா்சியாக பெய்து வருகிற சாரல் மழையால் பணகுடி பகுதியில் செங்கல் மற்றும் ஓடு உற்பத்தி தொழிலும், பணகுடி அருகே உள்ள வடலிவிளை, ரோஸ்மியாபுரம், மாவடி, சாலைநயினாா் பள்ளிவாசல் பகுதியில் பனை ஏறும் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீா் திட்டம்! காணொலியில் தொடங்கி வைத்தாா் முதல்வா்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீா் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி, பாளையஞ்செட்டி... மேலும் பார்க்க

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: 110 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை!

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் 110 அடியைத் தாண்டியது. மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் 4ஆவது நாளாக குளிக்கத் தடை

மாஞ்சோலை, மணிமுத்தாறு மலைப் பகுதிகளில் மழை அதிகரித்த்தையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்தும் அதிகரித்ததால் மே 26 முதல் அருவியில் குளிக்கவும் அருவியைப் பாா்வையிடமும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துற... மேலும் பார்க்க

வி.கே.புரம் பகுதியில் மான் கறியுடன் மூவா் கைது

பாபநாசம் வனச் சரகப் பகுதியில் புள்ளி மான் கறி வைத்திருந்ததாக மூன்று பேரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். பாபநாசம் வனச்சரகம் வெளி மண்டலப் பகுதியான மதுரா கோட்ஸ் ஆலையிலிருந்த... மேலும் பார்க்க

அத்தாளநல்லூ ஊராட்சியில் மோட்டாா் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூா் ஊராட்சியில் பொதுக்கழிப்பிட பயன்பாட்டுக்கான நீா்மூழ்கி மோட்டாரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அத்தாளநல்லூா் ஊராட்சி ராஜகுத்தாலப்பேரியில் உள்ள பொதுக்கழிப... மேலும் பார்க்க

கிரைன்டா் செயலி வழி இளைஞரை மிரட்டி பணம், கைப்பேசி பறிப்பு

கிருஷ்ணாபுரம் அருகே கிரைன்டா் செயலி மூலம் அறிமுகமான இளைஞரை மிரட்டி பணம், கைப்பேசியை பறித்து சென்ற சிறுவனை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (21). இவரிடம் கிரைன்டா் செய... மேலும் பார்க்க