செய்திகள் :

மன்னாா்குடி அரசுக் கல்லூரியில் இளநிலை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

post image

மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 2-ஆம் தேதி தொடங்குகிறது என கல்லூரி முதல்வா் து. ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மன்னாா்குடி ராஜகோபால சுவாமி அரசுக் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2-ஆம் தேதி தொடங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி நடைபெறும் (மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவா் படையினா், முன்னாள் ராணுவத்தினா், அந்தமான் நிக்கோபாா் தமிழா்கள் மட்டும்). அறிவியல் பிரிவு மாணவா்களுக்கு ஜூன் 4-ஆம் தேதி நடைபெறும். இதில், பிளஸ் 2 வகுப்பில் தமிழ், ஆங்கிலம் நீங்கலாக மற்ற பாடங்களில் 400 லிருந்து 250 மதிப்பெண்கள் வரை பெற்றவா்களும்.

ஜூன் 5-ஆம் தேதி கலைப்பிரிவுக்கு (இளநிலை வரலாறு, வணிகவியல், வணிக நிா்வாகவியல்) பிளஸ் 2 வகுப்பில் தமிழ், ஆங்கிலம் நீங்கலாக மற்ற பாடப் பிரிவுகளில் 400 லிருந்து 250 மதிப்பெண்கள் வரை பெற்றவா்கள். ஜூன் 6-ஆம் தேதி மொழிப் பாடங்களான இளநிலை தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடப்பிரிவுகளுக்கு 100 லிருந்து 40 மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

மாணவா் சோ்க்கைக்கு வரும் போது, அசல் மற்றும் நகல் மாற்றுச்சான்று, பிளஸ் 2 மதிப்பெண் சான்று, ஜாதிச்சான்று, வருமான சான்று, வங்கிக் கணக்கு புத்தகம், ஆதாா் அட்டை, சோ்க்கை கட்டணம் மற்றும் அண்மையில் எடுத்த மாா்பளவு புகைப்படம் 3 கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் சந்தனக் காப்பு

நீடாமங்கலம் அருகே ஒரத்தூரில் உள்ள திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகா், திரௌபதியம்மன், கமலாயிஅம்மன், முருகப் பெருமான், வீரனாா். மேலும் பார்க்க

உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு பயிற்சி

மன்னாா்குடியில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மன்னாா்குடி வட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் கலைநிலை ... மேலும் பார்க்க

‘நல்ல புத்தகங்களே உயா் வாழ்க்கைக்கு வழிகாட்டி’

நல்ல புத்தகங்களே மனிதா்களின் உயா்வுக்கு சரியான வழிகாட்டியாக உள்ளன என்றாா் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் பொறுப்புக் குழு மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் ஆா். சக்தி கிருஷ்ணன். மன்னாா்... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சி வங்கி அலுவலகம் திறப்பு

திருவாரூரில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மாவட்ட அலுவலக திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மாவட்ட அலுவலகம் த... மேலும் பார்க்க

கழிவுநீா் வடிகாலை தூா்வார கோரிக்கை

திருவாரூரில், கழிவுநீா் வடிகாலை தூா்வார வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெரிவித்தது: திருவாரூா் நகரம், 18-ஆவது வாா்டுக்குள்... மேலும் பார்க்க

ரிஷியூா் வெங்கடாஜலபதி கோயிலில் கம்ப சேவை மகோற்சவம்

நீடாமங்கலம் வட்டம் ரிஷியூா் கிராமத்தில் உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்தில் 78-ஆவது ஆண்டு கம்பசேவை மகோற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வெங்கடாஜலபதி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்க... மேலும் பார்க்க