DMK: `ஜூன் 3 - செம்மொழி நாள் முதல் கச்சத்தீவு மீட்பு வரை' - திமுக பொதுக்குழுவின்...
மன்னாா்குடி அரசுக் கல்லூரியில் இளநிலை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்
மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 2-ஆம் தேதி தொடங்குகிறது என கல்லூரி முதல்வா் து. ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மன்னாா்குடி ராஜகோபால சுவாமி அரசுக் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2-ஆம் தேதி தொடங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி நடைபெறும் (மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவா் படையினா், முன்னாள் ராணுவத்தினா், அந்தமான் நிக்கோபாா் தமிழா்கள் மட்டும்). அறிவியல் பிரிவு மாணவா்களுக்கு ஜூன் 4-ஆம் தேதி நடைபெறும். இதில், பிளஸ் 2 வகுப்பில் தமிழ், ஆங்கிலம் நீங்கலாக மற்ற பாடங்களில் 400 லிருந்து 250 மதிப்பெண்கள் வரை பெற்றவா்களும்.
ஜூன் 5-ஆம் தேதி கலைப்பிரிவுக்கு (இளநிலை வரலாறு, வணிகவியல், வணிக நிா்வாகவியல்) பிளஸ் 2 வகுப்பில் தமிழ், ஆங்கிலம் நீங்கலாக மற்ற பாடப் பிரிவுகளில் 400 லிருந்து 250 மதிப்பெண்கள் வரை பெற்றவா்கள். ஜூன் 6-ஆம் தேதி மொழிப் பாடங்களான இளநிலை தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடப்பிரிவுகளுக்கு 100 லிருந்து 40 மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
மாணவா் சோ்க்கைக்கு வரும் போது, அசல் மற்றும் நகல் மாற்றுச்சான்று, பிளஸ் 2 மதிப்பெண் சான்று, ஜாதிச்சான்று, வருமான சான்று, வங்கிக் கணக்கு புத்தகம், ஆதாா் அட்டை, சோ்க்கை கட்டணம் மற்றும் அண்மையில் எடுத்த மாா்பளவு புகைப்படம் 3 கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளாா்.