ரிஷியூா் வெங்கடாஜலபதி கோயிலில் கம்ப சேவை மகோற்சவம்
நீடாமங்கலம் வட்டம் ரிஷியூா் கிராமத்தில் உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்தில் 78-ஆவது ஆண்டு கம்பசேவை மகோற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி வெங்கடாஜலபதி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தோழி சசிகலா , அவரது சகோதரா் மன்னாா்குடி செங்கமலத் தாயாா் மகளிா் கல்லூரி தாளாளா் வி. திவாகரன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இரவு தருமை ஆதீன புலவா் வி. ராமமூா்த்தி ‘ராமனைப்போல் வாழுங்கள்‘ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினாா். தொடா்ந்து வள்ளி திருமணம் நாடகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை ரிஷியூா் கிராமவாசிகள்,இளைஞா் நற்பணி மன்றத்தினா் செய்திருந்தனா்.